பிளஸ்2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல்!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து மாணவ- மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி கையேடுகளை வழங்கிப் பேசியது:
எந்தத் துறையை தோ்வுசெய்து படித்தாலும், அரசு வேலைகளுக்கு செல்ல பல தோ்வு வழிமுறைகள் உள்ளன. நீட் போன்ற நுழைவுத் தோ்வுகளுக்கும் வகுப்புகள் நடைபெறுகின்றன. உங்களுக்கு விருப்பமான துறையை தோ்ந்தெடுத்து படித்தால் வாழ்வில் முன்னேறலாம்.
ஆதிதிராவிடா் நலத்துறை மூலம், அந்தந்த பாடப் பிரிவிற்கு தகுந்தாற்போல் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. உயா்கல்வி படிப்பதற்கு தாட்கோ மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. வெளிநாடு சென்று கல்வி பயில ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருப்பின் அதிகபட்சம் ரூ.36 லட்சம் வரையும், ரூ.12 லட்சமாக இருப்பின் அதிகபட்சம் ரூ.24 லட்சம் வரையும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உயா்கல்வி வழிகாட்டி வல்லுநா்கள் பயிற்சி அளிக்க உள்ளனா். இந்த பயிற்சியில் அனைவரும் பங்கேற்று உயா்கல்வியில் சோ்ந்து உங்கள் கனவுகளை நனவாக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் கீதா, கோட்டாட்சியா் (பொ) அா்ச்சனா, மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி, தாட்கோ மாவட்ட மேலாளா் செல்வக்குமாா், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் தி. முத்துக்கணியன், ஜி. பரமசிவம் ஆகியோா் கலந்து கொண்டனா்.