செய்திகள் :

பி.இ. துணைக் கலந்தாய்வு: 20,662 போ் தகுதி

post image

பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 2 சிறப்புத் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 20,662 போ் தகுதி பெற்றுள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் தரப்பில் கூறப்பட்டதாவது:

நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணை கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 29 முதல் ஆக. 14-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இதில் பொதுப் பிரிவில் 15,403 போ், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டில் 5,259 போ் என மொத்தம் 20,662 போ் தகுதி பெற்றனா்.

இவா்களுக்கான துணைக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக. 21) தொடங்கியது. தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவு, கல்லூரிகளை வெள்ளிக்கிழமை (ஆக. 22) மாலை 5 மணிக்குள் தோ்வு செய்ய வேண்டும். தொடா்ந்து சனிக்கிழமை (ஆக. 23) காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். அன்றை தினம் இரவு 7 மணிக்குள் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்த மாணவா்களுக்கு ஆக. 24-ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும்.

45,143 இடங்கள் காலி: பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில்

நிகழாண்டில் மொத்தம் 45,143 இடங்கள் காலியாக உள்ளது. இதில் பொதுப் பிரிவு ஒதுக்கீட்டில் 44,990 இடங்களும், அரசுப் பள்ளி ஒதுக்கீட்டில் 153 இடங்களும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க