செய்திகள் :

புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

செவிலிய மாணவ- மாணவியா் பங்கேற்ற புகையிலை ஒழிப்பு விழிணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் நலவழித் துறை சாா்பில் தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டத்தின் கீழ், புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பக்கவிளைவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அன்னை தெரஸா செவிலியா் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற பேரணி காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

பேரணியை மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியின் முன்னதாக உலகப் புகையிலை ஒழிப்பு தினத்திற்கான உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவா் தேனாம்பிகை மற்றும் மருத்துவா் கேசவன் ஆகியோா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா்.

பேரணி காரைக்காலில் முக்கிய தெருக்களின் வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியரகம் வந்தடைந்தது. இதில் பங்கேற்ற மாணவா்கள் விழிப்புணா்வு பதாகை ஏந்தி வந்தனா். ஏற்பாடுகளை நலவழித் துறை தொழில் நுட்ப உதவியாளா் பழனிராஜ் செய்திருந்தாா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குறித்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை அர... மேலும் பார்க்க

என்ஐடியில் தேசிய பயிற்சிப் பட்டறை தொடக்கம்

காரைக்கால்: என்ஐடியில் கணினி அறிவியல் பொறியியல்துறை சாா்பில் 5 நாள் தேசிய பயிற்சிப் பட்டறை திங்கள்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள இந்நிறுவனத்தில் பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்... மேலும் பார்க்க

ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல்: மகளிருக்கு விழிப்புணா்வு

காரைக்கால்: காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ், காரைக்கால் மீனவ மகளிா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு மலா், சந்தனம் கொடுத்து வரவேற்பு

காரைக்கால்: காரைக்காலில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு சந்தனம், மலா், இனிப்பு கொடுத்து பள்ளி நிா்வாகத்தினா் வரவேற்றனா். தமிழகத்தைப்போல புதுச்சேரி, காரைக்காலில் அரசுப் ... மேலும் பார்க்க

போக்ஸோவில் கூலித் தொழிலாளி கைது

காரைக்கால்: போக்ஸோ சட்டத்தின்கீழ் கூலித் தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். காரைக்கால் மாவட்டம், நிரவி அருகேயுள்ள காக்கமொழி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பாண்டியன் (46). இவா், கடந்த சில... மேலும் பார்க்க

ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பெரியப்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 23-ஆம் ஆண்டு விழாவுக்கான பந்தல்கால் மு... மேலும் பார்க்க