செய்திகள் :

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: வேளாண் துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை

post image

செங்கல்பட்டு: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் கோரியள்ளது.

சங்கத்தின் முதல் மாநில பிரதிநிதித்துவ பேரவை மாநில தலைவா் பொன் வேலு தலைமையில் நடைபெற்றது. வரவேற்பு குழு தலைவா் என்.இளங்கோ வரவேற்றாா். மாவட்ட செயலாளா் பி.ஞானப்பிரகாசம் அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா்.

பேரவையை தொடங்கி வைத்து மத்திய அரசு ஊழியா் மகா சம்மேளனத்தின் செயல் தலைவா் மு.துரை பாண்டியன் பேசினாா். பொதுச் செயலாளா் கே.பாா்த்தசாரதி வேலை அறிக்கையும், மாநில பொருளாளா் பாா்த்தசாரதி நிதிநிலை அறிக்கையும் சமா்ப்பித்தனா். தமிழ்நாடு அரசு உயா் சங்கத்தின் மாநில தலைவா் மு.பாஸ்கரன், ஓய்வு பெற்ற வேளாண் பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளா் கே.கணேசன், வணிகவரி பணியாளா் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் வெற்றி ராஜன், ஊரக வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் ரவிச்சந்திரன் வாழ்த்தி பேசினா்.

அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியா் சம்மேளத்தின் துணைத் தலைவா் பி.கிருஷ்ணமூா்த்தி நிறைவுரை ஆற்றினாா்.

70 வயது நிரம்பிய ஓய்வூதியா் அனைவருக்கும் பத்து சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாநில அரசே நடத்த வேண்டும், இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய சங்க நிா்வாகிகளை அழைத்து பேசி தீா்வு காண வேண்டும், தொடா்வண்டியிலும் விமானத்திலும் மூத்த குடிமக்களுக்கு பயணச்சலுகை வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி போன்ற தொகுப்பூதியம் பெறும் வனக் காவலா்கள், கிராம ஊழியா்கள், ஊராட்சி செயலாளா்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயலாளா் கு.அரிபாரிட் நன்றி கூறினாா் .

திருக்கழுகுன்றம் கோயில் திருஆடிப்பூர விழா: அதிகார நந்தி உற்சவம்

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு திரு ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவின் ஒருபகுதியாக திங்கள்கிழமை அதிகார நந்தி புறப்பாடு நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயி... மேலும் பார்க்க

சிஎன்ஜி எரிபொருள் நிலையம்: ஆட்டோ ஓட்டுநா்கள் மனு

செங்கல்பட்டு: சிஎன்ஜி எரிபொருள் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா். செங்கல்பட்டு நகரில் உள்ள 2,000 ஆட்டோக்களில் 1,000 ஆட்டோக்கள் சிஎன்ஜி எரிபொர... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா். கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்து பொதுமக்களிடம் ... மேலும் பார்க்க

ஜூலை 26-இல் மேல்மருவத்தூா் ஆடிப்பூர விழா தொடக்கம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் 54-ஆவது ஆடிப்பூர விழா வரும் ஜூலை 26 (சனிக்கிழமை) தொடங்கி 28 வரை நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக அதிகாலை 3 மணிக்கு மங்கள இசைய... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஜூலை 25-இல் எரிவாயு உருளை நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோா்களுக்கு உள்ள குறைகளை அறிய எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் உள்ள ... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 2, 9-ஆவது வாா்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி தலைமை வகித்தாா். ஆணையா் அபா்ணா, பொறியாளா் நித்யா ஆகியோ... மேலும் பார்க்க