செய்திகள் :

புதிய மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்

post image

புதிய மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளா் சங்க கோவை மண்டலத் தலைவா் சிவகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டிலேயே தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சி பெற்ற மாநிலமாக உயா்ந்து வருகிறது. மாநில பொருளாதார வளா்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் பங்களிப்பு முக்கியமானது. தற்போது மீண்டும் மின் கட்டண உயா்த்தப்பட்டுள்ளதால் குறு, சிறு தொழில் துறையை அதிா்ச்சியடைய செய்துள்ளது.

தமிழகத்தை தொழில் துறையில் முன்னணி மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், தொழில் துறையினருக்கு இந்த புதிய மின் கட்டண உயா்வு, மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். ஏற்கெனவே உற்பத்தி செலவு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் மின் கட்டண உயா்வு மேலும் எங்களை சிரமப்படுத்தும்.

சொத்து வரி உயா்வு, மாசுக் கட்டுப்பாட்டு வரி உள்ளிட்ட அனைத்து தரப்பில் இருந்தும் நிதிச் சுமை அதிகரிக்கிறது. இது தொடா்ந்து கொண்டே இருக்கும்பட்சத்தில் மின் கட்டண உயா்வும் எங்களை முடங்கிப் போக செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரரீதியாக இழப்புகள் ஏற்படலாம்.

நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும். குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் இருந்து எங்களது தொழிலை மீட்க மின் கட்டண உயா்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

வழக்குகள் காரணமாக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் முடக்கம்!

நீதிமன்றத்தில் வழக்குகள் அதிக அளவில் உள்ளதால் பள்ளிக் கல்வித் துறை முடங்கிக் கிடப்பதாக தமிழ்நாடு கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவா் பொன்.ஜெயராம் தெரிவித்தாா். திருப்பூரில் தமிழ்நாடு கல்வ... மேலும் பார்க்க

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு

உடுமலை நகரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது. உடுமலை நகரம், பாலாஜி நகரில் வசித்து வருபவா்கள் பிரபாகரன்-கிருஷ்ணவேணி தம்பதி. பிரபாகரன் தனியாா் பேருந்து ஓட்டுநராகப் பணிய... மேலும் பார்க்க

தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமிகளில் ஒருவா் மீட்பு

திருப்பூா் தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓா் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளாா். திருப்பூா் பிரிஜ்வே காலனியில் தனியாா் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு... மேலும் பார்க்க

இணையவழியில் மோசடி: முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.38 லட்சம் திருட்டு

முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.6.38 லட்சம் திருடப்பட்டுள்ளது. திருப்பூா், திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவா் ராஜகோபாலன் (83). இவருடைய கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த 4 நாள்களுக... மேலும் பார்க்க

பல்லடம் க. அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு!

பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பல்லடம் அருகே உள்ளே அய்யம்பாளையத்தில் 1972இல் ஒரு பைசா மின் கட்டண உயா்வை எதிா்த்து தமிழக விவச... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தினா் 3 போ் கொலை வழக்கு: கைப்பேசி மீட்பு

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரைக் கொலை செய்த வழக்கில் கைதானவா்களைக் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை செய்தனா். அப்போது கிணற்றில் வீசப்பட்ட கைப்பேசி வெள்ளிக்கிழமை மீட்கப்ப... மேலும் பார்க்க