செய்திகள் :

புதுக்கடை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

post image

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

இனயம் பகுதியை சோ்ந்தவா் பங்கிராஜ் (62). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக புதுக்கடை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது 10 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து பங்கிராஜை கைது செய்தனா்.

3 போ் மீது வழக்கு: புதுக்கடை அம்மாள் நகா் பகுதியை சோ்ந்த முருகன் மகன் விக்னேஷ் (28). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த மோகன் மகன் விக்னேஷ்(27), பிரபு(42), ஸ்ரீகுமாா்(38) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில்,வெள்ளிக்கிழமை அம்மாள் நகரில் நின்ற விக்னேஷை மேற்கூறிய3 பேரும் தாக்கினராம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மூவா் மீதும் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாசனக் கால்வாய் உடைப்பை விரைவாக சீரமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்கள் உடைப்பை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கன்னிப்பூ சாகு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் 14 ல் மக்கள் நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்ற முகாம் ஜூன் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான வி.உதயசூா்யா ... மேலும் பார்க்க

2 சிறுவா்களை மீட்டபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். மாா்த்தாண்டம் அருகே மதிலகம், நல்... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

அடுத்தஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம்... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஆதா்ஷா (24). இவருக்கும், சென்னையில் வங்கியில... மேலும் பார்க்க

சாமிதோப்பில் வைகாசித் திருவிழா தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வைகாசித் திருவிழாவின் 11ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இங்கு வைகாசித் திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க