செய்திகள் :

புதுச்சேரி டு விழுப்புரம்: `பைக் எப்படி ஓடுது?’ -பெட்ரோல் டேங்க்கில் மது கடத்தல்.. அதிர்ந்த போலீஸ்!

post image

தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் மதுபானங்களில் விலை குறைவு. அதனால் புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம், கடலூர், திண்டிவனம் போன்ற தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த குற்றப் பின்னணி கொண்ட சிலர், புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திச் சென்று விற்பது வழக்கம். அதன்படி விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையம் புதுச்சேரி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில் விழுப்புரம் தனிப்படை போலீஸார் நேற்று மாலை, பழைய பேருந்து நிலையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சீட்டுக்கு அடியில் பெட்ரோல் டேங்க்

அப்போது புதுச்சேரியில் இருந்து வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தினர். உடனே அவர்கள் வாகனத்தை திருப்பி அங்கிருந்து தப்பிக்க நினைத்தனர். ஆனால் அவர்களை மடக்கிப் பிடித்துவிட்ட போலீஸார், வாகனத்தின் ஆவணங்களை சோதனை செய்தனர். தொடர்ந்து அவர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்வதற்காக, சென்டர் ஸ்டாண்டு போட்டு நிறுத்தும்படி போலீஸார் கூறினர். அப்போடு பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் குலுங்கும் சத்தம் வழக்கத்தைவிட அதிகமாகவும், வித்தியாசமாகவும் கேட்கவே அவர்களிடம் அதுகுறித்துக் கேட்டிருக்கின்றனர்.

அப்போது அவர்கள் சொன்ன பதில் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, பெட்ரோல் டேங்க்கை திறந்து பார்க்க முயன்றனர். அப்போது வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த பெட்ரோல் டேங்க்கினுள், மது பாட்டில்கள் இருப்பதைக் கண்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, `பெட்ரோல் எங்கடா ? பெட்ரோல் இல்லாமலா வண்டி ஓடுது ?’ என்று அவர்களிடம் கேட்டனர். அப்போது அவர்கள், `மது பாட்டில்கள் கடத்துவதற்காக பெட்ரோல் டேங்க்கை வடிவமைத்தோம்.

கைது செய்யப்பட்டவர்கள்

சீட்டுக்கு அடியில் வேறு ஒரு பெட்ரோல் டேங்க் செய்து வைத்திருக்கிறோம். பல மாதங்களாக புதுச்சேரி மதுவை இப்படித்தான் கடத்தி வருகிறோம்’ என்று கூற, வாயடைத்துப் போயிருக்கின்றனர் போலீஸார். அதையடுத்து சந்துரு, சரவணன் என்ற அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் கடத்தி வந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சிவகாசி: பஸ்ஸில் இடம்பிடிக்க தங்கநகையுடன் பையை போட்ட பெண்... எடுத்துக்கொண்டு ஓடிய மூதாட்டி..!

சிவகாசியில் பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் மூதாட்டிகள் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். சூப்பர் மார்க்கெட்டில் நடந்த திருட்டில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர்களிடம் விசாரணை நடத்தும்போது அவர்கள் ஏ... மேலும் பார்க்க

திருச்சி: மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு! -மக்கள் அதிர்ச்சி... போலீஸார் தீவிர விசாரணை!

திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் ஏறிய சில மர்ம நபர்கள் மர்ம பொருளை வீசி சென்றதை அந்த பகுதி மக்கள் கவனித்ததாகச் சொல்லப... மேலும் பார்க்க

மும்பை : `தாதாசாஹேப் பால்கே' பெயரில் விருது : பாலிவுட் பிரபலங்களிடம் கோடிக்கணக்கில் மோசடி?

மும்பையில் அடிக்கடி சினிமா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பழம்பெரும் நடிகர்கள் பெயரில் வழங்கப்படுவதுண்டு. சினிமாவோடு தொடர்புடைய சில அமைப்புகள் இவ்விருது வழங்கும் விழாக்களை நடத்துவது வ... மேலும் பார்க்க

`அரசு வேலை' தருவதாக 21 பேரிடம் ரூ.1.37 கோடி வசூல்... `போலி பணி ஆணை' கொடுத்து மோசடி செய்த கும்பல்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (42). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரிடம், கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த மகாலட்சுமி, ஆண்டிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன், திருப்... மேலும் பார்க்க

Train travel: மதிமுக எம்.பி துரை வைகோ பெயரில் போலி இ.கியூ கடிதம்... ரயில் பயணத்தில் சிக்கிய இளைஞர்!

கடந்த, 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ஆம் தேதி சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை விரைவு ரயிலில் ஸ்டீபன் சத்தியராஜ் என்ற பயணிக்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் லெட்டர் பேடில் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து நேற்றைய தினம் 27 விசைப்படகுகளில் மீனவர்கள் அரசு அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில், குமார் எ... மேலும் பார்க்க