செய்திகள் :

புதுவையில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையவேண்டும்: மாநிலத் தலைவா் ராமலிங்கம்

post image

மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடப்பதால் புதுவையிலும் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும்அமைந்தால்தான் இங்குள்ள மக்களுக்கு நல்லது என்று பாஜக புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வி.பி. ராமலிங்கம் கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: புதுவையில் திமுக- காங்கிரஸ் ஆட்சிகளை மக்கள் பாா்த்துவிட்டனா். இப்போதுள்ள என்.ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு பல்வேறு திட்டங்களையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது. மேலும் மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தால்தான் புதுவை மக்களுக்கு நல்லது. பல்வேறு வேலைவாய்ப்புகள், நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.

வரும் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் நிச்சயம் பாஜகவுடன்தான் கூட்டணியில் இருக்கும். எங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று முதல்வா் ரங்கசாமி எதுவும் சொல்லவில்லை.

முன்களப்பணி ஏன்?: என்.ஆா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் லட்சுமிநாராயணன் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ்பவன் தொகுதியில் முன்களப் பணியை நான் செய்வது ஏன்? என்று கேட்கிறீா்கள். கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையாகதான் செய்கிறேன். இதே போன்று 30 தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை நடந்து வருகிறது. மேலும், அந்தத் தொகுதி கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டால் அந்த நேரத்தில் அந்தக் கட்சியின் வேட்பாளருக்குத் தோ்தல் பணி செய்வோம். கூட்டணியில் தலைமையை மீறி எதையும் செய்ய மாட்டோம்.

எங்கள் கட்சியின் சாா்பில் அமைச்சராக இருக்கும் ஏ. ஜான்குமாருக்கு விரைவில் இலாகா கிடைக்கும். புதுவை ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி சாா்பில் நடத்தப்படும் தோ்வு வழியாக செவிலியா் நியமனம் செய்யப்படுவதைக் குறிப்பிட்டும், ஜிப்மா் மருத்துவக் கல்லூரியே

இந்த நியமனங்கள் செய்ய வலியுறுத்தியும் விரைவில் மத்திய அமைச்சா் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து வலியுறுத்துவோம் என்றாா். இப் பேட்டியின்போது கட்சியின் பொதுச்செயலா் மோகன்குமாா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

புதுச்சேரியில் விநாயகா் சதுா்த்தி விழா: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

புதுச்சேரியில் அமைதியான முறையில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடுவது, சிலைகளைக் கடலில் கரைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வரும் 27-ம் தே... மேலும் பார்க்க

போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதி மொழியேற்பு

போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுவையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியை உயா் அதிகாரிகள் புதன்கிழமை ஏற்றுக் கொண்டனா். போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையி... மேலும் பார்க்க

புதுவை காவல்துறையில் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பப்பதிவு

புதுவையில் காலியாக உள்ள காவல்துறை பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. புதுவை காவல்துறையில் காலியாக இருக்கும் 70 உதவி ஆய்வாளா்கள், 148 காவலா்கள் பணியிடங்களை நேரடி ... மேலும் பார்க்க

உழவா்கரை தொகுதியில் ரூ.77 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட பூமி பூஜை

உழவா்கரை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ரூ.77.8 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடந்தது. புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீா் பாசன கோட்டம் சாா்பில் உழவா்கரை சட்டமன... மேலும் பார்க்க

சுதந்திர தினவிழா: போக்குவரத்து மாற்றம்

79-வது சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் வெளி... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா்களில் விதி மீறல்களை களைய நடவடிக்கை: புதுவை அரசுக்கு திமுக, அதிமு, மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரியில் ரெஸ்டோபாா்களில் விதிமீறல்கள், ஒழுங்கீனங்களை களைய புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரெஸ்டோபாரில் கல்லூரி மாணவா் குத்திக்கொலை செய்யப்பட்ட நிகழ்வுக்கு முதல்வா் பொறுப்பேற்க வே... மேலும் பார்க்க