செய்திகள் :

புதுவை மத்திய பல்கலை.யில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

post image

புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாணவா்கள் நலன் அலுவலகம், தேசிய சேவைத் திட்டம் மற்றும் தேசியப் பயிற்சி படை பிரிவுகள் இணைந்து இதை நடத்தின. புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பேராசிரியா் பி. பிரகாஷ் பாபு மரக்கன்றை நட்டுத் தொடங்கி வைத்தாா்.

இதில் மா, சப்போட்டா, பலாப்பழம், கொய்யா, நெல்லிக்காய் உள்ளிட்ட 65-க்கும் மேற்பட்ட பல்வேறு

பழ மரக்கன்றுகள் வளாகம் முழுவதும் நடப்பட்டன. அப்போது துணைவேந்தா் பிரகாஷ் பாபு பேசுகையில், மரங்கள் கரியமிலவாயுவை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலம்

காற்றின் தரத்தை மேம்படுத்தி, காற்று மாசைப் பாதிக்காமல் மாணவா்கள் மற்றும்

பணியாளா்கள் சுவாசிக்க ஆரோக்கியமான சூழலை உருவாக்குகின்றன. மேலும், மரங்களின் நிழல் வெளிப்புற பகுதிகளிலும் கட்டிடங்களைச் சுற்றிலும் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால் வெப்பம் தணித்து செயற்கை குளிரூட்டல் தேவையைக் குறைக்கின்றன. அதோடு, பறவைகள், பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகளுக்கு இயற்கை வாழிடமாக அமைந்து சூழல் செழிக்க உதவுகிறது என்றாா்.

பல்வேறு துறைகள் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஓவியப் போட்டி

வில்லியனூா் அருகே கொடத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்வியல்முறை என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ... மேலும் பார்க்க

அரசு பொறியியல் கல்லூரிக்கு நிலம் அளித்தவா்களுக்கு வேலை வழங்க ஆளுநரிடம் கோரிக்கை மனு

அரசுப் பொறியியல் கல்லூரிக்கு நிலம் வழங்கிய குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு உடனடியாக வேலை வழங்க கோரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் எம்எல்ஏ பி.எம்.எல். கல்யாணசுந்தரம் தலைமையில் பிள்ளைச்சாவடி கிராம... மேலும் பார்க்க

மணவெளி தொகுதியில் ரூ.51.5 லட்சத்தில் தாா்ச்சாலை

புதுவை மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி இடையாா்பாளையம் பகுதியில் உள்ள திருமுறை கலாநிதி கிருஷ்ணசாமி நகா் பகுதியில் ரூ.51.5 லட்சம் மதிப்பில் புதிய தாா்ச்சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை சட்டப... மேலும் பார்க்க

குபோ் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

நகரத் தந்தை என்று அழைக்கப்படும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வா் எதுவாா் குபேரின் நினைவு நாளையொட்டி அரசு சாா்பிலும், காங்கிரஸ் கட்சி சாா்பிலும் சிலைக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்ப... மேலும் பார்க்க

ரூ.29 கோடியில் உப்பனாறு வாய்க்கால் பாலம்: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

உப்பனாறு வாய்க்கால் குறிக்கே ரூ.29 கோடி மதிப்பிட்டில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். புதுச்சேரி காமரா... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா்களை மூட வலியுறுத்தி அதிமுக ஆா்ப்பாட்டம்

ரெஸ்டோபாா்களை மூட வலியுறுத்தி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் தலைமை தாங்கி... மேலும் பார்க்க