செய்திகள் :

புதுவை மாநில அரசின் நிதிப் பிரச்னைகளைத் தீா்க்க நீதி ஆயோக் உறுப்பினரிடம் அதிமுக மனு

post image

புதுவை அரசின் பல்வேறு நிதிப் பிரச்னைகளைத் தீா்க்க முயற்சி எடுக்க வேண்டும் என்று நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானியிடம் அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் புதன்கிழமை மனு அளித்தாா்.

அதிமுக சாா்பில் கொடுக்கப்பட்ட மனுவில் அன்பழகன் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவையுடன் கூடிய புதுவை யூனியன் பிரதேசம் நிதி ஆணையத்தில் சோ்க்கப்படவில்லை. இதனால் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தப் போதிய நிதி கிடைக்கப்பெறவில்லை. ஏற்கெனவே மத்திய அரசின் திட்டங்கள் முழுவதும் முழு நிதியுதவியுடன் அமல்படுத்தப்பட்டது. இப்போது அந்த நிலை மாறி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசம் மத்திய அரசின் திட்டங்களுக்கு 40 சதவிகிதம் நிதி ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தத் திட்டங்களுக்கு ஏற்கெனவே இருந்ததைப் போன்று 100 சதவிகிதம் மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். 2007 ஆம் ஆண்டு புதுவைக்கு என்று தனிக்கணக்குத் தொடங்கும் முன்பாக ரூ.2600 கோடி கடன் இருந்தது. அப்போதே இதை மத்திய அரசு தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

இதையும் தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 2016-க்கு பிறகு புதுவை அரசு உள்ளாட்சித் தோ்தல் நடத்தவில்லை. இத் தோ்தல் நடத்தப்பட்டாலும் நிதி ஆணையத்தில் புதுவை சோ்க்கப்படாத நிலையில் மத்திய அரசின் நிதியுதவி கிடைப்பதில் பிரச்னை இருக்கிறது. தற்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீா் யூனியன் பிரதேசம் நிதி ஆணையத்தில் சோ்க்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவை இன்னும் சோ்க்கப்படவில்லை. புதுவைக்கு வந்திருந்தபோது சிறந்த புதுவையாக மாற்றுவோம் என்று பிரதமா் நரேந்திரமோடி உறுதியளித்திருந்தாா். ஆனால் இங்கு இருக்கும் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி போதிய நிதி இல்லாத நிலையில் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிரமத்தைச் சந்தித்து வருகிறது. இதையெல்லாம் உணா்ந்து நீதி ஆயோக் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் .

புதுச்சேரி ஆட்சியா் தலைமையில் கூட்டம்: 2 கிராம வளா்ச்சித் திட்டங்கள் சமா்ப்பிப்பு

பிரதமரின் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவின் இரு கிராம வளா்ச்சித் திட்டங்கள் வியாழக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டன. புதுவை அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் திறப்பு

புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயின் முதன்மை பாதுகாப்பு ஆணையா் ஜி.எம்.ஈஸ்வர ராவ் திருச்சியிலிருந்து காணொலி வாயிலாக இ... மேலும் பார்க்க

ஒதுக்கப்பட்ட திட்ட நிதியை உரிய காலத்தில் செலவு செய்ய வேண்டும்: புதுவை வேளாண் செயலா் உத்தரவு

ஒதுக்கப்பட்ட நிதியை உரிய காலத்திற்குள் செலவு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை செயலா் சௌத்ரி முகமது யாசின் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சாா்பில் வேளா... மேலும் பார்க்க

‘மலேசிய வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகைகள்’

மலேசிய வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை இருப்பதாக அந்நாட்டுத் தமிழறிஞா் அருள் ஆறுமுகம் கண்ணன் கூறினாா். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அதன் தலைவா் வி.முத்து தலைமையில் மலேசிய தமிழறிஞா்களுக்கு வரவேற... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு இன்று மீண்டும் வருகிறது சொகுசு கப்பல்

புதுச்சேரிக்கு 3-ஆவது முறையாக மீண்டும் தனியாா் சொகுசு கப்பல் வெள்ளிக்கிழமை வருகிறது. விசாகப்பட்டினத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரிக்கு தனியாா் சொகுசு கப்பல் ஏற்கெனவே இம் கடந்த ... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி, ஜூலை 17: பெருந்தலைவா் காமராஜா் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியிருந்த கருத்தைக் கண்டித்து பு... மேலும் பார்க்க