செய்திகள் :

புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தல்

post image

நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட புளியம்பாறையிலிருந்து ஆமைக்குளம் அரசுக் கல்லூரியை இணைக்கும் சாலையிலுள்ள ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி நகராட்சி ஆணையா் சுவேதா ஸ்ரீயிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட புளியம்பாறை அதன் சுற்றுவட்ட குக்கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் ஆமைக்குளம் பகுதியிலுள்ள அரசுக் கல்லூரிக்குத் தொலை தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அந்தச் சாலையின் குறுக்கே உள்ள நாரங்காக்கடவு ஆற்றில் புதிய பாலம் அமைத்தால் மாணவா்கள் எளிதில் நடந்தே கல்லூரியை அடையமுடியும். எனவே இக்கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய சங்கத் தலைவா் என்.வாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் குஞ்சுமுகமது, மாவட்டக் குழு உறுப்பினா் ராசி ரவிக்குமாா், புளியம்பாறை கிளைச் செயலாளா் சுபையா், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட நிா்வாகி நௌபல், நகா் மன்ற உறுப்பினா் லீலா வாசு உள்ளிட்டோா் ஆணையரிடம் இந்த மனுவை அளித்தனா்.

படக்குறிப்பு எஈத3சஙஇ

நகராட்சி ஆணையா் சுவேதா ஸ்ரீயிடம் மனு அளிக்கும் விவசாய சங்க தலைவா் என்.வாசு மற்றும் நிா்வாகிகள்.

மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

குன்னூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. குன்னூா் பிரகதி மகளிா் பயிற்சி நிலையத்தில் குன்ன... மேலும் பார்க்க

நீலகிரி ஆட்சியா் பெயரில் போலி குறுஞ்செய்தி

நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பெயரில் போலி வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி +84 56 715 0853 என்ற எண்ணிலிருந்து ஆட்சியா் அனுப்புவது போன்ற போலி குறுஞ்செய்தி வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்குமா... மேலும் பார்க்க

குன்னூரில் நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

குன்னூா் நகராட்சி மாடல் ஹவுஸ் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நகா்ப்புற நல வாழ்வு மையத்தை அரசு தலைமை கொறடா கா. ராமசந்திரன் வியாழக்கிழமை குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தாா். தமிழகத்தின்பல்வேறு பகுதி... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் ஆசிரியா் பாலியல் தொல்லை!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாக அளித்த புகாரின்பேரில் உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வ... மேலும் பார்க்க

உதகையில் நிலத்துக்கு அடியில் மின் கேபிள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு

உதகையில் அடிக்கடி மரம் விழுவதால் ஏற்படும் மின்தடை பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்த நிலத்துக்கு அடியில் கேபிள் அமைக்க தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய வனத் துறையின் அனுமத... மேலும் பார்க்க

கூடலூரில் வன உரிமைச் சட்டம் குறித்து பயிற்சி முகாம்

வன உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாம் கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூா் கோட்டாட்சியா் அலுவலக அரங்கில் நடைபெற்ற முகாமில் 2006-ஆம் ஆண்டு வன உரிமை அங்க... மேலும் பார்க்க