செய்திகள் :

பெகாசஸ் வைத்திருக்கும் அரசு பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன்? காங்கிரஸ் எம்பி

post image

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எப்படி ஊடுருவினார்கள் என்று காங்கிரஸ் மக்களவை குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் கேள்வி எழுப்பியுள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகின்றது.

மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்து விவாதத்தை தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் கெளரவ் கோகோய் விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது:

ஏற்கெனவே, மத்திய அரசு தரப்பில் வெளியிட்ட அனைத்தையும் பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்திய மக்கள் உண்மையிலேயே தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால், 5 பயங்கரவாதிகள் நாட்டுக்குள் எப்படி ஊடுருவினார்கள்? என்பதுதான்.

பஹல்காம் தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது.

100 நாள்கள் ஆகியும் ட்ரோன்கள், செயற்கைக்கோள்கள், பெகாசஸ் உள்ளிட்டவை வைத்திருக்கும் அரசால் 5 பயங்கரவாதிகளை இன்னும் பிடிக்க முடியவில்லை.

வர்த்தகத்தை முன்வைத்து இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் 26 முறை கூறியுள்ளார். இதன் பின்னணியில் உள்ள உண்மையை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறப்பட்டாலும், பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம், நிதி உதவி செய்வதை இந்திய அரசால் தடுக்க முடியவில்லையா?

சில ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால், அது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு என நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Congress Lok Sabha Deputy Leader Gaurav Gogoi has questioned how terrorists from Pakistan infiltrated into India.

இதையும் படிக்க : இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா? ராஜ்நாத் சிங் சூசகம்!

ஆபரேஷன் மகாதேவ்: பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் கொலை

பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹாஸிம் மூஸா ஃபெளஜி, ஆபரேஷன் மகாதேவ் பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியி... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பேசாத ராஜ்நாத் சிங்: சு.வெங்கடேசன்

ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றிய கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். பஹ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தோண்டத்தோண்ட கிடைக்கும் ஆயுதங்கள்! பாதுகாப்புப்படை தீவிர சோதனை

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூரசந்த்பூர், கேங்க்போக்பி, பேர்ஸ்வால், டெங்க்நௌபால், சண்டெல் ஆகிய மலைப்பிரதேச மாவட்டங்களில் கடந்த சில ந... மேலும் பார்க்க

ஐபிஎல் கூட்ட நெரிசல்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு காவல் ஆணையருக்கு மீண்டும் பணி! கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சாம்பியன் ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தலையீடு இல்லை என திட்டவட்டமாக மறுக்கவில்லை: பிரியங்கா

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகக் கூறவில்லை என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கால இ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை - ஜெய்சங்கர்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு... மேலும் பார்க்க