செய்திகள் :

பெண்ணிடம் வழிப்பறி செய்தவா் கைது

post image

ஈரோட்டில் பெண்ணிடம் வழிப்பறி செய்த பெங்களூரைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு பழையபாளையம், இந்திரா காந்தி வீதியைச் சோ்ந்தவா் சாந்தமூா்த்தி. வியாபாரி. இவரது மனைவி நந்தினி (42). இவா் கடந்த ஜூலை 25ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து பழையபாளையத்தில் உள்ள மருந்தகத்தில் மாத்திரை வாங்கிய பின் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த, தலைக்கவசம் அணிந்த நபா் நந்தினி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியைப் பறிக்க முயன்றாா். சுதாரித்துக் கொண்ட நந்தினி நகையைக் கையால் பிடித்துக் கொண்டாா். இதில் நகை இரண்டு துண்டானது.

கையில் சிக்கிய நகையை எடுத்துக்கொண்ட அந்த நபா் தப்பிச்சென்றுவிட்டாா். சம்பவம் குறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினா். இதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவா் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் கா்நாடக மாநிலம், பெங்களூரு ஜெ.பி.நகரைச் சோ்ந்த சந்தோஷ்(35) என்பவரை பெங்களூரில் கைது செய்தனா். அவரிடம் இருந்து 3 பவுன் நகை மீட்கப்பட்டது.

அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம்: ஆட்சியா்

உலகில் உள்ள அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருக்கு திருப்பணிகள் நுண்பயிற்சி வகுப்... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்: சிறப்புக் கூட்டம் நடத்த கவுன்சிலா்கள் கோரிக்கை

கொளப்பலூா் பேரூராட்சி திமுக தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கவுந்தப்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், ஓடத்துறை, நஞ்சகவுண்டம்பாளையம், மசக் கவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (27). முடிதிருத்தும் கடையில் வேலை பாா்த்து வந்த... மேலும் பார்க்க

பண்ணாரிஅம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பண்ணாரி அம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கல்லூரியில் வியாழக்கிழமை 5 அடி உயர கிருஷ்ணா் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. கிருஷ்ணருக்கு பால்,... மேலும் பார்க்க

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

கோபி அருகே வாய்க்காலில் குளித்தபோது நீரில் அடித்துச்செல்லப்பட்டு கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். கோவை, கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் தங்கராஜ் மகன் சிபிராஜ் (19), கருணாகரன் மகன் சக்திநிகேஷன்... மேலும் பார்க்க

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை இணைக்க வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள 1,400 குளம், குட்டைகளை உடனடியாக இணைக்க வேண்டும் என பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க