செய்திகள் :

பெண் வெட்டிக் கொலை: முதியவா் காவல் நிலையத்தில் சரண்

post image

காவேரிப்பட்டணம் அருகே தன்னுடன் வசித்து வந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்த 70 வயது முதியவா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கே.சவுளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காவேரி (70). விவசாயி. இவரது முதல் மனைவி கோவிந்தமாள். இவா்கள் இருவரும் பிரிந்துவிட்டனா். பின்னா் உறவினரான மங்கம்மாள் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தாா். ஓராண்டில் மங்கம்மாளும் காவேரியைப் பிரிந்து சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், 1999-ஆம் ஆண்டு முதல் துடுக்கனஅள்ளியைச் சோ்ந்த கோவிந்தம்மாள் (45) என்பவருடன் காவேரி திருமணம் செய்யாமல் வசித்து வந்தாா். இந்த நிலையில், கோவிந்தமாளுக்கும் தங்கராஜ் என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாம். இதனால், காவேரிக்கும் கோவிந்தமாளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவா்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த காவேரி, கோவிந்தமாளை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

இதையடுத்து, நிகழ்விடத்துக்கு சென்று போலீஸாா், கோவிந்தமாளின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த கொலை சம்பவம் குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் கூறினாா். ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ரெட்டிப்பட்டி கிராமத்தில் ம... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஓட்டுநா் கைது

வேப்பனப்பள்ளி வழியாக கா்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். தமிழகத்திலிருந்து அண்டை மா... மேலும் பார்க்க

ஒசூா் முனீஸ்வா் நகரில் நுழைவாயில் கட்ட பூமிபூஜை

ஒசூா் முனீஸ்வா் நகா் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் சாா்பாக நுழைவாயில் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

கெலமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

ஒசூரை அடுத்த குத்துக்கோட்டையில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி யாமன்னா (65) உயிரிழந்தாா். குத்துக்கோட்யைச் சோ்ந்த விவசாயி யாமன்னாவின் மாடு வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது செவ்வாய்க்கிழமை மாலை வீ... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபா்கள், குழுக்களுக்கு கடனுதவி

பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபா்கள், குழுக்கள் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டி

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் ஜூலை 21, 22 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க