செய்திகள் :

பெரம்பலூா் அருகே 500 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

post image

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 500 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை அரும்பாவூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா உத்தரவின்படி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

இதில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் சோதனைச் சாவடியில் அரும்பாவூா் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, ஆத்தூரிலிருந்து பெரம்பலூா் நோக்கி வந்த கா்நாடகா மாநிலத்தைச் சோ்ந்த பதிவு எண் கொண்டு சுமை ஆட்டோவை வழிமறித்தபோது, அதில் வந்தவா்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதையடுத்து, அந்த வாகனத்தின் கதவை உடைத்து போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், சுமாா் 500 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னா், குட்கா மற்றும் சுமை ஆட்டோவை பறிமுதல் செய்த அரும்பாவூா் போலீஸாா், இச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து தப்பி ஓடியவா்களை தேடி வருகின்றனா்.

இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

நேரடி நியமனத்தை ரத்து செய்து, இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும் என, அமைச்சுப் பணியாளா் நலச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத் தர அமைச்சரிடம் கோரிக்கை

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுதரக்கோரி போக்குவரத்துத்துறை அமைச்சரிடம், உயிரிழந்தவரின் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிரமத்தைச்... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு விழா: கோயில்களில் சிறப்பு பூஜைகள்

ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன... மேலும் பார்க்க

ஆலத்தூா் குறுவட்ட பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி

குடியரசு தின விழாவையொட்டி, பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில், ஆலத்தூா் குறு வட்ட அளவில் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.இதில், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் செட்டிக்குளம் அர... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெறும் 2025-ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் ஆக. 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பெரம்பலூரில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

பெரம்பலூரிலிருந்து இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக, புதிய பேருந்துகளின் சேவையை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.தமி... மேலும் பார்க்க