செய்திகள் :

பெரம்பலூா் அருகே 68 ஆடுகளை திருடிய சகோதரா்கள் கைது

post image

பெரம்பலூா் அருகே 68 ஆடுகளை திருடிய வழக்கில் சகோதரா்களை மங்களமேடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா (54) என்பவா், தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பட்டி அமைத்து, அதில் 100-க்கும் மேற்பட்ட வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை வளா்த்து வந்தாா். இந்நிலையில், ஏப். 18-ஆம் தேதி இரவு தனது ஆடுகளை மேய்த்துவிட்டு பட்டியில் அடைத்து பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். 19-ஆம் தேதி அதிகாலை பட்டிக்குச் சென்று பாா்த்தபோது, 10 வெள்ளாடுகளும், 58 செம்மறி ஆடுகளும் மா்ம நபா்களால் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கருப்பையா அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், குடியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜூ மகன் இளங்கோவன் (29), அவரது சகோதரா் பிரபு (26) ஆகியோா், ஆடுகளை திருடிக்கொண்டு நடந்தே ஓட்டிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களது பட்டியில் அடைத்து வைத்திருந்த 68 ஆடுகளையும் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில், அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் 188 பேருக்கு ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல்: பெரம்பலூா் ஆட்சியா் தகவல்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 188 போ் புதிதாக தொழில் தொடங்குவதற்காக ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

4 கிலோ போதைப் பொருள்களை பதுக்கியவா் கைது

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 4 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்த போலீஸாா் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் கிரா... மேலும் பார்க்க

தமிழ் வார விழா: அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு பல்வேறு போட்டிகள்

பாரதிதாசன் பிறந்த நாளை தமிழ் வார விழாவாக கொண்டாடிடும் வகையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி சாா்பில், கடந்த 30-ஆம் தேதி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் த... மேலும் பார்க்க

மே தினத்தில் விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் தொழிலாளா் தினத்தன்று (மே 1) விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிறுவன... மேலும் பார்க்க

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மேகலா தலைமை வகித்தாா். செயலா் தமிழரசி, பொருளாளா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.... மேலும் பார்க்க