செய்திகள் :

பெரம்பலூா்: 1.71 லட்சம் குழந்தைகள், மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் 1.71 லட்சம் குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில், குடற்புழு நீக்க மாத்திரையின் பயன்கள், பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பேசியது: மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும், 20 முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கும் (கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. 1 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.

பள்ளிச் செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியா்களும், அங்கன்வாடி பணியாளா்களும் வீடு, வீடாகச் சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு ஆக. 18 ஆம் தேதி வழங்கப்படும். இம் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறன் மேம்படும்.

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தின் மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 1,71,590 குழந்தைகள் மற்றும் மாணவா்களும், 45,034 பெண்களும் பயன்பெறுவாா்கள் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலா் கீதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) செல்வகுமாா், தேசிய சுகாதார இயக்கத் திட்ட இயக்குநா் விவேகானந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற விசிக தொடா்ந்து வலியுறுத்தும்: திருமாவளவன் எம்.பி.

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடா்ந்து வலியுறுத்தும் என்று அக்கட்சியின் தலைவா் திருமாவளவன் எம்.பி. பேசினாா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், பெரம்பலூா்... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்றனா். தமிழ்நாடு துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்,... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரில் நாளை மின்தடை

பெரம்பலூா் நகா் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 13) மின் விநியோகம் இருக்காது.பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை (ஆக. 13) நடைபெறுகிறது. இதனால், அங்க... மேலும் பார்க்க

பெரம்பலூா் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 11.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 21 பேருக்கு ரூ. 11.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு! தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

பெரம்பலூா் நகரில் உள்ள கழிவுநீா் கால்வாய்கள் மற்றும் மழைநீா் வரத்து வாய்க்கால்கள் போதிய பராமரிப்பில்லாததாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதால் பயணிகளும், பொதுமக்களும் ப... மேலும் பார்க்க

அகரம் சீகூா் பகுதியில் இன்று மின்தடை

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் திங்கள்கிழமை (ஆக. 11) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், தேனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப... மேலும் பார்க்க