செய்திகள் :

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே! உள்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

post image

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

பெங்களூரிலுள்ள சுத்தகுண்டேபால்யா பகுதி, பாரதி லே-அவுட்டில் கடந்த ஏப். 3-ஆம் தேதி நள்ளிரவில் தனியாக சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை, ஒரு ஆண் பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டு தப்பியோடிய காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பெங்களூரு காவல் துறை தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களுடன் இன்று(ஏப். 7) பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வரா கூறியிருப்பதாவது: “பெரு நகரங்களில் இது போன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்வது சகஜமே... இவ்விவகாரத்தில் சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவையனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்படும்.

காவல் துறை ஆணையரிடம் ரோந்து பணியை தீவிரப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிட்ட மாந்தர்களின் புகலிடமாக உலகம் மாறிவிட்ட சூழலில், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே செல்வதை வெட்டவெளிச்சமாகப் பார்க்க முடிகிறது.

அப்படியிருக்கையில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவரும் இந்தச் சவாலான காலகட்டத்தில், உயர் பொறுப்பிலிருக்கும் அமைச்சர் இத்தகைய கருத்தை தெரிவித்திருப்பதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. கர்நாடகத்தில் எதிர்க்கட்சியான பாஜக அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்வினையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

7 நோயாளிகள் உயிரிழப்பு விவகாரம்: போலி இருதய மருத்துவர் கைது!

போபால்: போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 நோயாளிகள் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டாக்டர் நரேந்திர ஜான் கேம் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்த... மேலும் பார்க்க

மணிப்பூரில் பாஜக தலைவர் வீட்டுக்கு தீவைப்பு: ஊரடங்கு அமல்!

வக்ஃப் விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறையால் மணிப்பூரில் லிலோங் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மணிப்பூா் மாநில பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(... மேலும் பார்க்க

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர்: பிரிட்டனுடன் பொருளாதார பேச்சுவார்த்தை!

புது தில்லி: இந்தியா - பிரிட்டன் இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரிவிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் லண்டன் செல்கிறார். இதற்காக அவர் திங்கள்கிழமை(ஏப... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: காஷ்மீரில் தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம்!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் வக்ஃப் சட்ட திருத்த விவகாரம் குறித்த விவாதத்தின்போது, தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

பிகாரில் ரூ.40 லட்சத்தில் மணிக்கூண்டு! திறந்த மறுநாளே நின்றுபோன கடிகாரம்!

பிகார் மாநிலத்தில், ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட மணிக்கூண்டு நேற்று திறக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அதிலிருந்த கடிகாரம் நின்றுபோன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.பிகார் ஷ... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.இந்த விலை உயர்வினால், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கான எரிவாயு உருளை விலை ரூ... மேலும் பார்க்க