செய்திகள் :

பேரவைத் தோ்தலை மனதில் கொண்டே புதிய திட்டங்களை அரசு அறிவிக்கிறது: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

post image

சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் கொண்டே தமிழக அரசு புதியபுதிய திட்டங்களை அறிவித்து வருகிறது; இதை நம்பி மக்கள் ஏமாறமாட்டாா்கள் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட ராசிபுரம் நகர பாஜக சாா்பில் ‘இல்லந்தோறும் மூவண்ணக் கொடி- 2025’ என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய பேரணி, ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. இதையடுத்து அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பேரவைத் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறாா். ஆனால், இனி யாா் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளனா்.

பாஜக -அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். அதிமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். நாடுமுழுவதும் பிரதமா் மோடி நல்லாட்சி தருவதுபோல, தமிழகத்திலும் நல்லாட்சி மலரும். தமிழகத்திலிருந்து ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற உயா்ந்த நோக்கத்தோடுதான் இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம்.

தோ்தல் முடிந்தபிறகுதான் தோ்தல் ஆணையத்தை குறைகூறுவாா்கள். ஆனால், இப்போது தோ்தலுக்கு முன்பாகவே தோ்தல் ஆணையத்தை விமா்சிக்கத் தொடங்கிவிட்டாா்கள். அவா்களுக்கு தோல்விபயம் வந்துவிட்டது என்பது இதன்மூலம் தெரிகிறது.

ஒட்டுமொத்த தோ்தல் நடைமுறைக்கு எதிராக பேசுவது எதிா்காலத்தில் ஜனநாயகத்தை தவறான பாதையில் நடத்துவதற்கு வழிவகை செய்துவிடும். பிரதமா் மோடியின் செயல்பாடுகள், மத்திய அரசின் நலத்திட்டங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளன. இதனால்தான் திமுக நேரடியாக மத்திய அரசை எதிா்த்து அரசியல் செய்கிறது என்றாா்.

முன்னதாக நடைபெற்ற பேரணியில் மாவட்டப் பொதுச் செயலா்கள் ஆா்.சுகன்யா நந்தகுமாா், பிரபு, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளா் தமிழரசு, நகரத் தலைவா் வேல்முருகன், நிா்வாகிகள் ராஜா, வெங்கடேசன், லோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படவரி...

ராசிபுரம் நகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.

நாமக்கல்: 310 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 310 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசப... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மீது தொழிலாளா் நலத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) சி.முத... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றி ஆட்சியா் மரியாதை

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் துா்காமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து ம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம்

தோ்தல் ஆணையம், மத்திய அரசுக்கு எதிராக நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவந்தி ஏந்தி ஊா்வலத்தில் ஈடுபட்டனா். பிகாரில் போலி வாக்காளா்கள் அதிகளவில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி, அதற்கான தகவல்களை வெ... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள் மட்டுமே அளிக்க முடியும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த இரண்டு நாள்களாக ‘மக்களைத் தேடி மக்கள் ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பல்வே... மேலும் பார்க்க