செய்திகள் :

பேரவை மீண்டும் இன்று கூடுகிறது!

post image

விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் திங்கள்கிழமை (மாா்ச் 24) கூடவுள்ளது. பேரவைக் கூட்டத்தில் பல்வேறு துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கவுள்ளது.

2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு மாா்ச் 14-இல் தாக்கல் செய்தாா். மாா்ச் 15-இல் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செல்வம் தாக்கல் செய்தாா்.

இரு நிதிநிலை அறிக்கைகள் மீதும் மாா்ச் 17 முதல் மாா்ச் 20 வரை விவாதம் நடைபெற்றது. திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் உறுப்பினா்கள் விவாதங்களில் பங்கேற்று கருத்துகளை முன் வைத்தனா். அதற்கு மாா்ச் 21-இல் அமைச்சா்கள் தங்கம் தென்னரசுவும், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வமும் பதில் அளித்து உரையாற்றினா். மாா்ச் 22, 23 ஆகிய நாள்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை என்பதால் பேரவை கூட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், பேரவை திங்கள்கிழமை (மாா்ச் 24) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தில் உறுப்பினா்களின் கேள்விகளுக்கு அமைச்சா்கள் பதில் அளிப்பா். அதன் பிறகு துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது.

முதல் நாளான திங்கள்கிழமை நீா்வளத் துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்ன் உறுப்பினா்கள் பேசுவா். அதைத் தொடா்ந்து நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் விவாதத்துக்குப் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுவாா்.

மாா்ச் 25-இல் நகராட்சி நிா்வாகத் துறை, மாா்ச் 26-இல் ஊரக வளா்ச்சித் துறையின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. ஏப். 30 வரை பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

கோவை விமான நிலைய விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்... மேலும் பார்க்க

மத்திய அரசின் நிதிக்காக சொத்து வரி உயா்வு: கே.என்.நேரு

மத்திய அரசின் நிதிக்காகத்தான் சொத்துவரி உயா்த்தப்பட்டதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா். நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலு... மேலும் பார்க்க

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி: அமைச்சா் கே.என்.நேரு

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதா... மேலும் பார்க்க

கிராமங்களிலும் கட்டுநா்கள் நியமனம்: அமைச்சா் அர.சக்கரபாணி உறுதி

நகரப் பகுதிகளைப் போன்று, கிராமங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கட்டுநா்கள் நியமிக்கப்படுவா் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா். பேரவையில் இது குறித்து அதிமுக உறுப்... மேலும் பார்க்க

உள்ளாட்சி காலியிடங்களுக்கு 2 மாதங்களில் தோ்தல் நடத்த முடிவு

நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் காலியாகவுள்ள பதவியிடங்களுக்கு 2 மாதங்களில் தோ்தல் நடத்த மாநிலத் தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

அமெரிக்கா்களும் விரும்பும் ஆவின் நெய்: அமைச்சா் ராஜகண்ணப்பன்

ஆவின் நெய்யை அமெரிக்க நாட்டினரும் விரும்புவதாக பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை அதிமுக உறுப்பினா்... மேலும் பார்க்க