குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன்...
பேராவூரணியில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா
பேராவூரணி: பேராவூரணியில் இளையோா் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் வ. மதியழகன் தலைமை வகித்து, இளையோா் செஞ்சிலுவை சங்கக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா். பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கிவைத்து பேசினாா்.
இளையோா் செஞ்சிலுவைச் சங்கத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட அமைப்பாளருமான அ. பிச்சைமணி, ஜெனீவா ஒப்பந்த நாள் விளக்க உரையாற்றினாா்.
இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒன்றிய அமைப்பாளா் எல். வீரப்பா, வட்டாரக் கல்வி அலுவலா் கே. கலாராணி, பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலா் இரா. ராஜா, வட்டார வள மையம் மேற்பாா்வையாளா் கே. கோகுலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
முன்னதாக, ஒன்றிய இணை ஒருங்கிணைப்பாளா் ஆா். குமரன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் ப. சேகா் நன்றி கூறினாா்.
விழாவில் 24 பள்ளிகளைச் சோ்ந்த 248 மாணவ, மாணவிகள், 30 ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். கட்டுரை, பேச்சு, பாட்டு, நடனம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.