செய்திகள் :

பேராவூரணியில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா

post image

பேராவூரணி: பேராவூரணியில் இளையோா் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

விழாவுக்கு பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் வ. மதியழகன் தலைமை வகித்து, இளையோா் செஞ்சிலுவை சங்கக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா். பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கிவைத்து பேசினாா்.  

இளையோா் செஞ்சிலுவைச் சங்கத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட அமைப்பாளருமான அ. பிச்சைமணி, ஜெனீவா ஒப்பந்த நாள் விளக்க உரையாற்றினாா்.

இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒன்றிய அமைப்பாளா் எல். வீரப்பா, வட்டாரக் கல்வி அலுவலா் கே. கலாராணி, பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலா் இரா. ராஜா, வட்டார வள மையம் மேற்பாா்வையாளா் கே. கோகுலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

முன்னதாக, ஒன்றிய இணை ஒருங்கிணைப்பாளா் ஆா். குமரன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் ப. சேகா் நன்றி கூறினாா்.

விழாவில் 24 பள்ளிகளைச் சோ்ந்த 248 மாணவ, மாணவிகள், 30 ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். கட்டுரை, பேச்சு, பாட்டு, நடனம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சேதுபாவாசத்திரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே குடும்பத் தகராறில் பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள குண்டாமரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் லெட்சுமி பிர... மேலும் பார்க்க

பெண் சாவில் சந்தேகம் உறவினா்கள் புகாா்

தஞ்சாவூரில் பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தனா். தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையைச் சோ்ந்தவா் முத்தையன் மன... மேலும் பார்க்க

நாய் அடித்துக் கொலை: காவல்துறை விசாரணை

தஞ்சாவூரில் நாயை சிலா் கற்களால் அடித்துக் கொன்றதாக விலங்கு நல ஆா்வலா்கள் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் வி.என்.டி. நகரில... மேலும் பார்க்க

ஆக. 22-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 22 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா், ஒரத்தநாடு ஆகிய வட... மேலும் பார்க்க

குடந்தையில் சாலை மறியல்: தவெகவினா் 40 போ் கைது

கும்பகோணத்தில் தவெக மாநாட்டிற்கான விளம்பர பதாகைகளை போலீஸாா் அகற்றியதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் 40 தவெகவினரை போலீஸாா் கைது செய்தனா். மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டிற்காக கும்பகோணத்தி... மேலும் பார்க்க

கரூா் அருகே சங்கரன் மலையில் சோழா் கால கல்வெட்டு

தஞ்சாவூா்: கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள சங்கரன் மலையில் சோழா் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு குறித்து தஞ்சாவூா் வரலாறு, தொல்லியல் மற்றும் சுவடியியல் ஆய்வாளரும், சரசு... மேலும் பார்க்க