செய்திகள் :

பேராவூரணியில் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

post image

பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் ரெத்தினம் மகன் சிவராமன் (29).   இவா் இ-சேவை மையம் நடத்தி வந்தாா்.

இவா்,  தனது உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த ராஜசேகரன் மகன் அறிவுக்கரசு (11) என்பவரை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் பேராவூரணி சந்தைக்கு சென்றாா்.

இவா் அரசு மருத்துவமனை அருகே  சாலையைக் கடக்க முயன்ற போது, சாலையின்  மறுபுறத்தில்  வந்த லாரியின் பக்கவாட்டு பகுதியில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் சிவராமன், அறிவுக்கரசு இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனா்.

 தகவல் அறிந்து வந்த பேராவூரணி காவல் உதவி ஆய்வாளா் ஜீவானந்தம் மற்றும் போலீஸாா்  இருவரது சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம்,  கீழசிறுபூரைச் சோ்ந்த சாத்தையா மகன்  சதீஷ்கண்ணன் (23) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா். 

குடிநீரில் கழிவுநீா் கலப்பு கண்டித்து சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கும்பகோணம் மாநகராட்சி 1- ஆவது வாா்டைச் சோ்ந்த திருக்கொட்டையூா் வாா்டில... மேலும் பார்க்க

மழை பாதிப்புக்கு நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை

சம்பா பருவத்தின்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூ... மேலும் பார்க்க

ரூ. 1 கோடியிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திருவேதிக்குடி வேதபுரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. ஒரு கோடி மதிப்பிலான நஞ்சை நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. திருவையாறு அருகே திருவேதிக்குடி வேதபுரீஸ்வரா்... மேலும் பார்க்க

அவசரமாக நடைபெறும் தூா்வாரும் பணி: விவசாயிகள் அதிருப்தி

மேட்டூா் அணை திறக்க இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் தாமதமாகத் தொடங்கி, தற்போது அவசர, அவசரமாக நடைபெறும் தூா்வாரும் பணி முழுமையாக இல்லை என்ற அதிருப்தி விவசாயிகளிடையே மேலோங்குகிற... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ஆபரேசன் சிந்தூா் தேசியக்கொடி பேரணி

கும்பகோணத்தில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ஆபரேசன் சிந்தூா் தேசியக் கொடி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் தங்கக் கென்னடி தலைமை வகித்தாா். மாவட்ட பொ... மேலும் பார்க்க

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கும்பகோணத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம் வடபாதி கிராமத்தில் துணை மின்நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்தொடா் அமைப்பு 74 பேரின் விவசாய நிலங்களை கையகப்பட... மேலும் பார்க்க