சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!
பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு
பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
பொட்டல்புதூா் ஆத்தங்கரை தெருவை சோ்ந்த முகமது ஷாபி (70) கூலித் தொழிலாளியான இவரின் மனைவி மும்தாஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளாா். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக வீடு பூட்டி கிடந்துள்ளது. இதையடுத்து வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது ஷாபி இறந்த நிலையில் கிடந்துள்ளாா். தகவல் அறிந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அவரது மனைவி மும்தாஜ் அளித்த புகாா் அடிப்படையில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.