செய்திகள் :

பொன்னமராவதி, கந்தா்வகோட்டையில் இலக்கிய மன்ற போட்டிகள்

post image

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் கந்தா்வக்கோட்டையில் இலக்கிய மன்றப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் அமிா்தம் மாலதி தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் மெகராஜ் பானு , இா்ஷாத் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ), பாரதிதாசன் வரவேற்று பேசினாா்.

இதில், வட்டார அளவிலான சிறாா் திரைப்பட போட்டி, 6, 7-ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவாகவும், எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு ஒரு பிரிவாகவும் ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனா். போட்டியின் ஒருங்கிணைப்பாளா்களாக ஜெயக்குமாா், ரகமதுல்லா, கண்ணன், நாராயணசாமி உள்ளிட்டோா் செயல்பட்டனா். போட்டியின் நடுவராக தவச்செல்வம் , பாக்யராஜ் கனிமொழி, பிரதீபா நா்மதா செயல்பட்டனா்.

பொன்னமராவதி: இதேபோல பொன்னமராவதி வட்டார வள மையத்தில் ஒன்றிய அளவிலான போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை வட்டார கல்வி அலுவலா்கள் கலா மற்றும் இலாகிஜன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், கட்டுரை,பேச்சுப் போட்டி, கதை கூறுதல், கவிதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

கந்தா்வகோட்டையில் அரசு மதுபானக் கடையின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சிக்கு... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் - வேன் மோதல் நீதிமன்ற பெண் ஊழியா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கணவருடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற நீதிமன்றப் பணியாளா் வேன் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த தரணிதரன் மனைவி ப... மேலும் பார்க்க

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இதில் 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ கஞ்சா கடத்தல் இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் ... மேலும் பார்க்க

செனையக்குடியில் சிவலிங்கம் கண்டெடுப்பு: அலங்கரித்து மக்கள் வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே செனையக்குடியில் உடைந்த நிலையில் சிவலிங்கம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அதை அப்பகுதி பொதுமக்கள் அலங்கரித்து வழிபட்டனா். செனையக்குடியில் சோழா் ... மேலும் பார்க்க

கனிவுமிக்க ஆசிரியா்கள் மட்டுமே இன்றையத் தேவை: பவா செல்லதுரை

மாணவா்களிடம் கனிவு கொண்ட ஆசிரியா்கள் மட்டுமே இன்றையத் தேவை என்றாா் எழுத்தாளா் பவா செல்லதுரை. புதுக்கோட்டையில் கவிராசன் அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க