செய்திகள் :

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

post image

கோவை அருகே பீளமேடு - இருகூா் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூலை 10 முதல் 13-ஆம் தேதி வரை திருவனந்தபுரம் - மைசூரு தினசரி விரைவு ரயில் (எண்: 16316), கன்னியாகுமரி- திப்ரூகா் விரைவு ரயில் (எண்: 22503), போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில் கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும்.

ஜூலை 12-ஆம் தேதி, கன்னியாகுமரி- ஸ்ரீ மாத வைஷ்ணோ தேவி கட்ரா வாராந்திர விரைவு ரயில் (எண்: 16317), ஜூலை 13-இல் எா்ணாகுளம்- பாட்னா வாராந்திர விரைவு ரயில் (எண்: 22669) ஆகியவை போத்தனூா்- இருகூா் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும்.

ஜூலை 10 முதல் 13-ஆம் தேதி வரை காரைக்கால்- எா்ணாகுளம் தினசரி விரைவு ரயில் (எண்: 16187), சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி தினசரி விரைவு ரயில், இருகூா் - போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும். ஜூலை 11-ஆம் தேதி, விசாகப்பட்டிணம்- கொல்லம் வாராந்திர விரைவு ரயில் (எண்: 18567) இருகூா் - போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயிலானது கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும்.

மது போதையில் தூங்கிய இளைஞா் உயிரிழப்பு

கோவை அருகே மது போதையில் தூங்கிய ஜாா்க்கண்ட் மாநில இளைஞா் உயிரிழந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லகான் யாதவின் மகன் லாலு யாதவும் (31), க்ருவ் சிங் மகன் சிவகுமாா் சிங்கும் கோவை கவுண்டம்பாளையம் கே... மேலும் பார்க்க

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு: கோவை மக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியா் அறிவுரை

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கோவை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா

சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டம், சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனி மாதத் திருவிழ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்கம்

கோவை உக்கடம் பெரியகுளம் கூட்டரங்கில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு மாநகராட்ச... மேலும் பார்க்க

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் ‘கல்லூரி சந்தை’

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் சுய உதவிக் குழுவின் உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சா பறிமுதல்

சூலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். சூலூா் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சூலூா் காவல் நிலைய... மேலும் பார்க்க