செய்திகள் :

போரை நிறுத்தியதாக 21-வது முறை கூறிய டிரம்ப்! எப்போது மௌனம் கலைப்பார் மோடி? - காங்கிரஸ்

post image

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 21 ஆவது முறையாக கூறியுள்ள நிலையில் பிரதமர் மோடி எப்போது மௌனம் கலைப்பார்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜம்மு -காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான 4 நாள் தாக்குதலுக்குப் பிறகு போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.

வர்த்தகத்தை முன்வைத்து இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தியதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், டிரம்ப் கூறியது பற்றி பிரதமர் மோடி பதில் பேசாமல் அமைதியாக இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 21-வது முறையாக கூறியுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"அணு ஆயுதப் போராக மாறவிருந்த இந்தியா - பாகிஸ்தான் 4 நாள் போரை நிறுத்தினேன் என்று கடந்த 59 நாள்களில் குறைந்தது 21 ஆவது முறையாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

போரை நிறுத்துங்கள் அல்லது அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை இழப்பீர்கள் என தான் கூறியதாகவும் அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தானுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கிறார் டிரம்ப்.

டிரம்ப் விவகாரத்தில் எப்போது மௌனம் கலைப்பீர்கள் பிரதமரே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Congress questioned when Prime Minister Modi will break his silence as US President Trump claims to have stopped the India-Pakistan war for the 21st time.

அஜித்குமார் மரண வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல்!

குடியரசுத் தலைவருக்கு எதிராக ஆட்சேபகர வார்த்தைகள்: கார்கே மீது பாஜக குற்றச்சாட்டு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்ட... மேலும் பார்க்க

அரசு நிர்வாகத் தலையீடு இல்லாத நீதித்துறையே அம்பேத்கரின் விருப்பம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்று அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர் விரும்பியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பு: இந்தியா வெற்றிகர சோதனை

நீண்ட தூர இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடிய நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது. லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான கவராட்டியில் ஜூன் 23 மு... மேலும் பார்க்க

விமான கட்டண திடீா் உயா்வு பிரச்னை: தீா்வு காண நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் டிஜிசிஏ உறுதி

விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படும் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்ககம் (டிஜிசிஏ) உறுதி அளித்தது. மகா ... மேலும் பார்க்க

இணையவழி பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத நிதிமாற்றத்துக்கு பயன்படுத்தும் அபாயம் - சா்வதேச அமைப்பு எச்சரிக்கை

இணையவழி வா்த்தக மற்றும் பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத அமைப்புகள் தங்களுடைய பணப்பரிமாற்றுத்துக்காக தவறாக பயன்படுத்துப்படுவதாக உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பு (எஃப்.ஏ.டி.எஃப்) எச்சரித்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு மேற்கு வங்கத்தில் இருவா் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடைய இருவரை மேற்கு வங்கத்தின் கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா். இவா்களில் ஒருவா் கொல்கத்தாவின் பவானிபூா் பகுத... மேலும் பார்க்க