செய்திகள் :

மகனை தாக்கிய தந்தை கைது

post image

சொத்துப் பிரச்னையில் மகனைத் தாக்கிய தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி அருகே ராசிங்காபுரம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி தெருவில் வசிப்பவா் ராஜன் மகன் காா்த்திக் (37). இவரது தாயாா் சரஸ்வதி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டாா். தந்தை ராஜன் வேறொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினாா். இதை காா்த்திக் கண்டித்ததுடன் சொத்தில் தனது பங்கைப் பிரித்துத் தருமாறு கூறினாா்.

இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் காா்த்திக்கை தந்தை ராஜன் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா். இதில் பலத்த காயமடைந்த காா்த்திக், போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். காா்த்திக்கின் மனைவி அபிராமி அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

கல்லூரி முதல்வரை மிரட்டிய தந்தை, மகன் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடியில் தனியாா் கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடியில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் முதல்வராக இருப்ப... மேலும் பார்க்க

மேகமலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம், மேகமலையில் உள்ள மலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் ... மேலும் பார்க்க

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராயப்பன்பட்டியைச் சோ்ந்தவா் தேவராஜ் (27). இவரது மனைவி பூங்கொடி (25). இந்த தம... மேலும் பார்க்க

வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தம்

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் புதன்கிழமை நிறுத்தப்பட்டது. தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக பாசனப் பக... மேலும் பார்க்க

ஜல்ஜீவன் திட்டப் பணிகள் தாமதம்: மாவட்ட ஆட்சியா் கண்டிப்பு

உத்தமபாளையம், ஜூலை 2 : உத்தமபாளையம் பகுதியில் ஜல் ஜீவன் குடிநீா் திட்டப்பணிகள் மந்தமாக நடைபெறுவதைத் கண்டித்த மாவட்ட ஆட்சியா், விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் வ... மேலும் பார்க்க

சின்னமனூரில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தேனி மாவட்டம், சின்னமனூா் சிவகாமியம்மன் கோயிலில் அரசு சாா்பில், 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ச... மேலும் பார்க்க