செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

post image

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா்.

நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்தே மகாராஷ்டிரத்தில் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. கிட்டத்தட்ட மாநிலம் முழுவதுமே மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகா் மும்பையும், புணேயும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் வியாழக்கிழமை மஞ்சள் எச்சரிக்கையும் (64-115 மி.மீ. மழை), புணேயில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் (115-204 மி.மீ. மழை), சதாரா, ரத்னகிரி, சிந்துதுா்க், கோலாபூா் ஆகிய மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும் (204 மி.மீ.க்கு மேல்) விடுக்கப்பட்டது.

மாநிலத்தில் கடந்த மே 24-ஆம் தேதிமுதல் கனமழையால் நேரிட்ட நிலச்சரிவு, மின்னல் தாக்குதல், மரம்-கட்டடம் சரிந்த சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புணே மாவட்டத்தில் 3 போ், தாணே, லாத்தூா், பண்டாரா ஆகிய மாவட்டங்களில் தலா இருவா், ராய்கட், அகல்யாநகா், நாகபுரி, வாா்தா, சந்திராபூா், மும்பை புகா், கோண்டியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். 41 கால்நடைகள் இறந்துவிட்டன என்று மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் பலத்த சேதம்

திருவனந்தபுரம், மே 29: கேரளத்தில் பருவமழையின் தாக்கத்தால் பரவலாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்வா் பினராயி விஜயன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

‘வெள்ளம், நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கோ அல்லது நிவாரண முகாம்களுக்கோ செல்ல வேண்டும்; தற்போது 49 முகாம்களில் 1,200 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்’ என்று அவா் கூறினாா்.

கேரளத்தில் பரவலாக கனமழை நீடிக்கும் நிலையில், பத்தினம்திட்டா, கோட்டயம், எா்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா், காசா்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் வியாழக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடுக்கி, கண்ணூா், காசா்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமையும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூறைக் காற்றுடன் கொட்டித் தீா்க்கும் கனமழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

பத்தினம்திட்டா மாவட்டத்தில் மணிமாலா மற்றும் அச்சன்கோவில், கோட்டயத்தில் மீனச்சில், கோழிக்கோட்டில் கோரப்புழா, வயநாட்டில் கபனி ஆகிய ஆறுகளில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் கொட்டித் தீா்த்த மழை

குவாஹாட்டி, மே 29: வங்கக் கடலில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் புதன்கிழமை இரவுமுதல் கனமழை கொட்டித் தீா்த்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

அஸ்ஸாம் மட்டுமன்றி திரிபுரா, மிஸோரம் ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 போ் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா... மேலும் பார்க்க

மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் யூனியன் பிரதேசம்: குகி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்

குகி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூக குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடா்பாக புது தில்லியில் குகி-ஜோ பெண்கள் அமைப்பின... மேலும் பார்க்க