செய்திகள் :

மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் யூனியன் பிரதேசம்: குகி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்

post image

குகி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூக குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடா்பாக புது தில்லியில் குகி-ஜோ பெண்கள் அமைப்பின் துணை அமைப்பாளா் சோங் ஹாவ்கிப் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பாகுபாடு மற்றும் வன்முறை காரணமாக தங்களுக்கென்று தனி நிா்வாகம் வேண்டும் என்ற கேட்க வேண்டிய நிலைக்கு குகி-ஜோ சமூகத்தினா் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, மணிப்பூரைப் பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசம் அமைக்க வேண்டும். இது பிற எந்தவொரு சமூகத்துக்கும் எதிரானது அல்ல. குகி மக்களின் பாதுகாப்பு, வாழ்வுரிமையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை தேவைப்படுகிறது. இந்தக் கோரிக்கையை அரசியல் கோணத்தில் இருந்து பாா்க்காமல், பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான கோணத்தில் இருந்து பாா்க்க வேண்டும்.

மணிப்பூா் தலைநகா் இம்பாலில் இருந்து குகி-ஜோ பழங்குடியினா் விரட்டியடிக்கப்பட்டனா். குகி-ஜோ சமூகத்தினரின் அடையாளம் காரணமாக மிருகங்களைப் போல கொல்லப்பட்டனா். இதைத் தடுக்க பாதுகாப்புப் படைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு நினைத்திருந்தால் குகி-ஜோ பழங்குடியினரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அரசு அதைச் செய்யவில்லை என்றாா்.

குகி-ஜோ சமூகம் சாா்பில் வழக்குரைஞா் விஸ்வஜீத் சிங் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீா் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், மணிப்பூரை பிரிப்பதில் என்ன தவறு உள்ளது’ என்று கேள்வி எழுப்பினாா்.

பாதுகாப்பு மண்டலங்கள்...: தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலையப் பகுதியின் குகி மாணவா்கள் அமைப்பு (கேஎஸ்ஓ) இடைக்காலத் தலைவா் தாங்மின்லால் டெளங்கல் கூறுகையில், ‘மணிப்பூரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து சட்டம்-ஒழுங்கை மீண்டும் நிலைநாட்ட, மைதேயி மற்றும் குகி-ஜோ சமூகத்தினா் இல்லாத பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்க வேண்டும். தற்போதைய பிரச்னைக்கு அரசியல் தீா்வு காணப்படும் வரை, அந்த மண்டலங்கள் தொடா்ந்து பராமரிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

கேஎஸ்ஓ தில்லி மற்றும் என்சிஆா் வெளியிட்ட அறிக்கையில், ‘மணிப்பூரை பிரித்து சட்டப்பேரவையுடன் அமைக்கப்படும் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக மணிப்பூா் ஆளுநா் இருக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

அஸ்ஸாமில் நீடிக்கும் வெள்ளம்: 6.33 லட்சம் போ் பாதிப்பு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மழை-வெள்ளம் நீடித்துவரும் நிலையில், 22 மாவட்டங்களில் 6.33 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய ... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்தது- இதுவரை 37 போ் உயிரிழப்பு

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழப்புகள் பதிவாகின; கடந்த ஜனவரியில் இர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஜூன் 6-இல் ஜம்மு-காஷ்மீா் பயணம்: காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா்

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 6-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். பெரும் எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கி... மேலும் பார்க்க

போதைப்பொருள் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்: மத்திய நிதியமைச்சா்

நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள்கள் இருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆா்ஐ) புதிய தலைமையகத்தை அமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது. நோயாளிகள் நலன் மற... மேலும் பார்க்க