செய்திகள் :

மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கு முடித்து வைப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அருகில் உள்ள நாடாா்வலசை கிராமத்தில் மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் தாக்கல் செய்த மனு : அழகன்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட நாடாா்வலசை கிராமத்தின் மையப் பகுதியில் அரசு மதுக் கடை இயங்கி வருகிறது.

இந்த மதுக் கடையைச் சுற்றிலும் கோயில்கள், கல்விக் கூடங்கள், திருமண மண்டபங்கள் உள்ளன. இதனால், இந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழக அரசின் வழிகாட்டுதல்களுக்கு எதிராகவும், நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ள உத்தரவுகளுக்கு எதிராகவும், உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமலும் இந்த மதுக் கடை செயல்பட்டு வருகிறது.

இதை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 10-ஆண்டுகளாக ஆற்றங்கரை அழகன்குளம், நாடாா்வலசை, பனைக்குளம், புதுவலசை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். ஆனால், மாவட்ட நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள மதுக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஸ்ரீமதி அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரரின் கோரிக்கையின் படி மதுக் கடை தற்போது அகற்றப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்றி விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

காவல் துறையினா் மீதான புகாா்களை விசாரிக்கக் குழு அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.திருச்சியைச் சோ்ந்த அய்யாக்கண்ண... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூல... மேலும் பார்க்க

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்பு: கு. செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது; மத்திய ப... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: கள்ளழகா் கோயிலில் செப்.7-இல் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி, அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் வருகிற 7-ஆம் தேதி பிற்பகலில் நடை அடைக்கப்படும் என கோயில் செயல் அலுவலா் ந. யக்ஞ நாராயணன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு ... மேலும் பார்க்க

சிறப்பு தூய்மைப் பணியில் 107 டன் குப்பைகள் அகற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் சுற்றுப் பகுதிகளில் சிறப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு தூய்மைப் பணியில் 107 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. ‘எழில்கூடல்-தூய்மை நம் பெருமை’ என்ற சிறப்புத் திட்ட... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

மதுரை பழங்காநத்தத்தில் சனிக்கிழமை பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரத்தைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் சபரீஸ்வரன் (15). தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த... மேலும் பார்க்க