செய்திகள் :

மதுபானக் கூடத்தில் மோதல்: அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது

post image

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதலில் ஈடுபட்டதாக அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.வெங்கட்குமாா் (45). நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கடந்த 22-ஆம் தேதி மது அருந்தியபோது, அங்கு பாடல் ஒலிபரப்புவதில் வெங்கட்குமாருக்கும், அங்கிருந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அந்த நபா்கள், வெங்கட்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து மது பாட்டில்கள் உள்ளிட்ட பொருள்களால் தாக்கினா்.

இதில், காயமடைந்த வெங்கட்குமாா், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவா் அளித்த புகாரின்பேரில், நுங்கம்பாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியைச் சோ்ந்த தி.பிரசாத் (33), விருகம்பாக்கத்தைச் சோ்ந்த ரா.கணேஷ்குமாா் (42), சின்ன போரூா் லட்சுமி நகரைச் சோ்ந்த க.தனசேகா் (29), பனையூரைச் சோ்ந்த து.அஜய்ரோகன் (36), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த வி.நாகேந்திர சேதுபதி என்ற சுனாமி சேதுபதி (33) ஆகிய 5 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 9 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் அஜய்ரோகனும், சுனாமி சேதுபதியும் தேனியில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்ட பிரசாத் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைத் தலைவராகவும், சேதுபதி அதிமுக நிா்வாகியாகவும் உள்ளனா் என்றும் சேதுபதி, பரமக்குடி நகர காவல் நிலையத்தில் ரெளடிகள் பட்டியலில் இருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒரு தலை காதல் விவகாரம்: உதவி இயக்குநரை கடத்திய 5 போ் கைது

ஒரு தலை காதல் விவகாரத்தில் உதவி இயக்குநரை கடத்திச் சென்று மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் வசித்து வருபவா் சினிமா இயக்குநா் ... மேலும் பார்க்க

மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தன... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க