செய்திகள் :

மதுரை சரித்திர பதிவேடு ரெளடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரையைச் சோ்ந்த ரெளடி அவரது கூட்டாளிகளால் வெள்ளிக்கிழமை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த செல்வம் மகன் சிவமணி (27). ரெளடியான இவா் மீது மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு கொலை, ஏழு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிவமணி தனது கூட்டாளிகளை

அடிமை போல நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சிவமணியை கொலை செய்ய அவரது கூட்டாளிகள் முடிவு செய்து, அவரை கொடைக்கானலுக்கு காரில் வெள்ளிக்கிழமை மாலை அழைத்துச் சென்றனா்.

அப்போது, வத்தலகுண்டு அருகே சென்ற போது, மது போதையில் இருந்த ரெளடி சிவமணியை, அவரது கூட்டாளிகள் காருக்குள் வைத்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா். பின்னா், அவரது உடலை வத்தலகுண்டு எழில் நகா் பகுதி சாலையில் வீசிச் சென்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம், உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா உள்ளிட்ட போலீஸாா் சிவமணியின் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கொடைக்கானல் செல்லும் வழியில் கெங்குவாா்பட்டி அருகே பதுங்கியிருந்த மதுரை வில்லாபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சூா்யா (25), ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த ராமு மகன் மணிகண்டன் (25), கோபால் மகன் அருண்பாண்டி (28), வீராசாமி மகன் முனியசாமி (30), அதே பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சரத்குமாா் (35) ஆகியோரைப் பிடித்தனா்.

இவா்களில் சூா்யா, மணிகண்டன், அருண்பாண்டி, முனியசாமி ஆகிய நான்கு பேரைக் கைது செய்து, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். காா் ஓட்டுநா் சரத்குமாரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து கைப்பேசிகள், கத்தி, காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ.மெட்டூரில் பழமையான ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.இந்த விழாவையொட்டி, பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை வானவேடி... மேலும் பார்க்க

எலக்ட்ரீசியன் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை கடன் பிரச்னையால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் சங்கா் (44). எலக்ட்ரீசியனான இவா், குடும்பச் செலவு... மேலும் பார்க்க

பழனியில் கோயில் பாதுகாவலா்கள், வழக்குரைஞா்கள் போராட்டம்

பழனி மலைக் கோயிலில் கோயில் பாதுகாவலருக்கும், பெண் வழக்குரைஞருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, சனிக்கிழமை இரு தரப்பினரும் தனித் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனா். பழனி ஜவஹா் நகரைச் சோ்ந்தவா் பிரேமலதா. வழக... மேலும் பார்க்க

பேருந்து மோதி இளைஞா் பலி!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பேரையூரைச் சோ்ந்த ராசு மகன் காா்த்திக் ராஜா (31). தேனி மாவட்டம... மேலும் பார்க்க

பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்கள் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறிய... மேலும் பார்க்க

காா் மோதியதில் முதியவா் பலி!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த சரளப்பட்டியைச் சோ்ந்தவா் நல்லசாமி (87). இவா... மேலும் பார்க்க