செய்திகள் :

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி

post image

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி முறைகேடு செய்த வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாக புகாா் எழுந்த நிலையில், இது தொடா்பான விசாரணையில், ரூ.150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் அதிகாரிகளின் கடவுச் சொற்களை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சென்னையில் கைது செய்யப்பட்ட மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தை மதுரைக்கு அழைத்து வந்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜபடுத்துவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைகளுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு சர்க்கரை அளவு கூடுதலாக இருந்ததுடன் அதிகளவிற்கான இரத்த அழுத்தம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோடியின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் வாரணாசி வாக்காளர் பட்டியல்.! 50 பேருக்கு ஒரே தந்தை.!

Madurai Mayor Indrani's husband Pon Vasanth has been admitted to the Madurai Government Hospital for treatment due to ill health.

வாக்குத்திருட்டு,சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கைகளுக்கு திமுக கண்டனம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலா்கள் கூட்டத்தில் சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள “வாக்குத் திருட்டு” மற்ற... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,320-க்கு விற்பனையாகிறது.அதன்படி, தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.1,240 குறைந்துள்ளது.செ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கோர விபத்து: பிக்-அப் வாகனம் லாரியுடன் மோதியதில் 11 பேர் பலி

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் தௌசா-மனோஹர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை பிக்-அப் வாகனம் கண்டெய்னர் லாரி மீது மோதியதில் குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர். மேலும் 10-க்க... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் க... மேலும் பார்க்க

ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நடந்து வரும் ஆபரேஷன் அகால் 9வது நாளில், இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவம் உறுதி செய்திருக்கிறது.வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் ராணுவத்தினருக்கும்... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவது துரதிருஷ்டவசமானது: உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட... மேலும் பார்க்க