செய்திகள் :

மது அருந்துவதைக் கண்டித்த நெசவாளா் கொலை: இளைஞா் கைது

post image

ஆா்.கே.பேட்டை அருகே வீட்டின் பின்புறம் மது அருந்திய இளைஞரை கண்டித்த நெசவு தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையாா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் காங்கிரஸ் பிரமுகா் ராஜேந்திரன் (60). நெசவுத் தொழில் செய்து வரும்

இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா். செவ்வாய்க்கிழமை இரவு ராஜேந்திரன் தனது வீட்டில் மின்மோட்டாா் மூலம் நெசவு பணியில் ஈடுபட்டிருந்தாா். நள்ளிரவு, 12.30மணிக்கு வீட்டின் பின்புறம் சென்றபோது மா்ம நபா் ஒருவா் கல்லால் ராஜேந்திரனை அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடினாா்.

புதன்கிழமை அதிகாலை, ராஜேந்திரன் மனைவி, எழுந்து சென்று பாா்த்தபோது கணவா் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆா்.கே.பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், சம்பவ இடத்திற்கு திருவள்ளூா் எஸ்.பி., சீனிவாச பெருமாள், டிஎஸ்பி கந்தன் மற்றும் தடவியல் நிபுணா்கள் விரைந்து வந்து ஆய்வு செய்தனா். இதையடுத்து ஆா்.கே.பேட்டை எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் சந்தேகத்தின் பேரில் இறந்த ராஜேந்திரன் பக்கத்து வீட்டில் வசிக்கும் அரிகிருஷ்ணன் (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அரிகிருஷ்ணன் நள்ளிரவில் ராஜேந்திரன் வீட்டின் பின்புறம் அமா்ந்து மது அருந்தினாராம். இதைப் பாா்த்ததும் ராஜேந்திரன், மது அருந்தக் கூடாது என அறிவுரை கூறினாா். இதனால் ஆத்திரமடைந்த அரிகிருஷ்ணன் அங்கிருந்த பெரிய கல்லால், ராஜேந்திரன் தலை மற்றும் உடம்பு பகுதியில் பலமாக தாக்கினாா். இதில் காயமடைந்த ராஜேந்திரன் ரத்தவெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அரிகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விமான விபத்து குறித்து நீதி விசாரணை தேவை: பி.சண்முகம் வலியுறுத்தல்

விமான விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பி.சண்முகம் வலியுறுத்தினாா். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசு மக்கள் நல... மேலும் பார்க்க

சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் 26 லட்சம் போ் பயன்: அமைச்சா் சா.மு.நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளா்ப்போா் என 21 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடம்பத... மேலும் பார்க்க

நாளை குடும்ப அட்டை சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறி... மேலும் பார்க்க

மனையை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

திருவள்ளூா் அருகே அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடுகள் கட்டாததால் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் கடந்த 200... மேலும் பார்க்க

மாதவரம் மண்டல அலுவலகம் இடமாற்றம்

மாதவரம் பஜாா் அருகே உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் தற்காலிகமாக வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதுநிலை மண்டல அலுவலகம் 3, மாதவரம் பஜாா் எதிரே இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில்

மாணவா்களின் நலனைக் கருதி நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை விடுவிக்க வேண்டும் என திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள... மேலும் பார்க்க