செய்திகள் :

மத்தியப் பிரதேசம்: புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்

post image

மத்தியப் பிரதேசத்தில் புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றி, தனது உயிரை வளர்ப்பு நாய் ஒன்று தியாகம் செய்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே சிவம் பர்கையா தனது வளர்ப்பு நாயான ஜெர்மன் ஷெப்பர்ட்டையும் அழைத்துக்கொண்டு நடைப்பயணம் சென்றிருக்கிறார். அப்போது காட்டில் இருந்து அவரை நோக்கி புலி ஒன்று வந்துள்ளது.

உடனே இதைக்கண்ட அந்த நாய் குரைத்து, குரைத்து உரிமையாளரிடம் புலியை நெருங்கவிடாமல் செய்துள்ளது. பின்னர் அந்த புலி, நாயின் மீது பாய்ந்து அதை காட்டை நோக்கி இழுத்துச் சென்றது. சிறிது நேர சண்டைக்குப் பிறகு, நாயை விட்டுவிட்டு புலி காட்டுக்குள் மறைந்தது. இதில் அந்த நாய்க்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.

சிறுமலையில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி - திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

பர்கையா காயமடைந்த தனது செல்லப்பிராணியை உடனடியாக மாவட்ட தலைமையகத்தில் உள்ள கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றார். ஆனால் அந்த நாய் சில மணிநேரங்களில் இறந்தது. புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்ற தனது உயிரைவிட்ட அந்த நாயின் தைரியத்தை கிராம மக்கள் பாராட்டினர்.

பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடி

நாட்டில் கடந்த பிப்ரவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் இது 9.1 சதவீதம் அதிகமாகும். அரசுத் தரவுகளின்படி, பிப்ரவரியில் கிடைக்கப் ... மேலும் பார்க்க

6.5% வளா்ச்சியுடன் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும்: ஐஎம்எஃப்

2025-26-ஆம் நிதியாண்டில் 6.5 சதவீத வளா்ச்சியுடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது. அதிக தனியாா் முதலீடு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை போ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவு: 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு 46 போ் மீட்பு

உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயா் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆா்ஓ) தொழிலாளா்கள் மேலும் 17 பேரை மீட்புப் படையினா் சனிக்கிழமை மீட்டனா். இதுவரை 50 தொழிலாள... மேலும் பார்க்க

மே 8 முதல் கியூட்-யுஜி நுழைவுத் தோ்வு: விண்ணப்பம் தொடக்கம்

வரும் மே 8-ஆம் தேதி தொடங்கும் நடப்பு ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வுக்கு (கியூட்-யுஜி) விண்ணப்பம் சனிக்கிழமை தொடங்கியது. நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, ம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் நக்ஸல்கள் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் கிரண் சவாண் கூறியதாவது: ... மேலும் பார்க்க

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு மாா்ச் 24-இல் விசாரணை

ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவா்கள் குறித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் கருத்துக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கின் அடுத்த விசாரணை மாா்ச் 24-... மேலும் பார்க்க