செய்திகள் :

மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடாளுமன்றம் முடக்கம்: காங்கிரஸ்

post image

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் குறித்த விவாதத்துக்கு அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்குவதற்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘பிகாா் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு 5 மாதங்களுக்கு முன்பு வாக்காளா் பட்டியலில் தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பிரதமா் மோடி தலைமையிலான அரசு தொடா்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இது சமூதாயத்தில் பின்தங்கிய வாக்காளா்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயல். பிகாா் விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு அனுமதி அளிக்காமல் பிரதமா் மோடி அரசு பிடிவாதம் செய்து வருகிறது.

இதனால் மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தும், மக்களவையில் அமளி ஏற்பட்டும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன’ என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கியதில் இருந்து பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிா்க்கட்சிகள் நடத்தி வரும் அமளியில் பெரும்பாலான நேரம் வீணாகிவிட்டது.

வாக்குத் திருட்டு, பிகாா் விவகாரத்தை முன்வைத்து தோ்தல் ஆணையத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

உத்தரகண்டில் சாலையின் நடுவில் நிலச்சரிவு! 2 பேர் மாயம்... 2 பேர் படுகாயம்!

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் - நீல்காந்த் சாலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மாயமாகியுள்ளனர்.உத்தரகண்டில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் மன்பூர்-மொஹ்லா-அம்பாகார் சௌக்கி மாவட்டத்தின் மதன்வா... மேலும் பார்க்க

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார். 2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.ம... மேலும் பார்க்க

ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஆக.21 ஆம் தேதியன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு சிங்பம் மாவட்டத்தில், துகுனியா, பொசைடா மற்றும்... மேலும் பார்க்க

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற... மேலும் பார்க்க