செய்திகள் :

மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம்! - முகமது ஷமிக்கு கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு

post image

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, கடந்த 2014 ஆம் ஆண்டு ஹசின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கும் இடையிலான கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து கோரி பிரிந்தனர்.

அப்போது முகமது ஷமி தனது மனைவிக்கு ரூ. 50,000 மற்றும் மகளுக்கு ரூ. 80,000 மாதாந்திர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு இந்த மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜஹான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஹசின் ஜஹான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அஜோய் குமார் முகர்ஜி தலைமையிலான அமர்வு, முகமது ஷமி தன்னுடைய முன்னாள் மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.1.5 லட்சமும், மகளுக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஷமியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு, ஹசின் ஜஹான் கொல்கத்தா அணியின் மாடலாகவும், சியர்லீடராகவும் பணியாற்றிவந்தார். இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்தத் தம்பதியினருக்கு 2015 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

2018 ஆம் ஆண்டு வரதட்சணை, துன்புறுத்தல் மற்றும் மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஹசின் ஜஹான் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு காரணமாக, முகமது ஷமியில் மத்திய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Star Indian pacer Mohammed Shami has faced a significant legal setback, as the Calcutta High Court has ordered him to pay monthly alimony totaling Rs 4 lakh to his estranged wife, Hasin Jahan.

இதையும் படிக்க... இந்தியா, சீனாவுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா! - அமெரிக்கா முன்மொழிவு

டிஎன்பிஎல்: எலிமினேட்டரில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெல்ல 141 ரன்கள் இலக்கு!

டிஎன்பிஎல் எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றிபெற 141 ரன்களை இலக்காக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயித்துள்ளது. திண்டுக்கல்லில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் ... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபியிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐ ஒழுங்காணையம் நோட்டீஸ்!

ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு பிசிசிஐ ஒழுங்காணையம், நெறிமுறை அதிகாரி கூட்டநெரிசலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி... மேலும் பார்க்க

மதிய உணவு இடைவேளை: இந்திய அணி அதிரடி, ஜெய்ஸ்வால் அரைசதம்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 98 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்ச... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைக்கவிருக்கும் இந்திய மகளிரணி கேப்டன்!

இந்திய மகளிரணி டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் டி20 போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தவிருக்கிறார். இந்திய மகளிரணி இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையா... மேலும் பார்க்க

2-ஆவது டெஸ்ட்: இந்தியா பேட்டிங், பும்ரா அணியில் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் பும்ரா இல்லை என்பது ரசிகர்கள் மத்த... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவிக்காத இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 2) முதல் தொடங்கு... மேலும் பார்க்க