மயில் மாா்க் சம்பா ரவை நிறுவனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
மயில் மாா்க் சம்பா ரவை நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்நிறுவனத்தின் பங்குதாரா்கள் செந்தில்குமாா், பாலசுப்பிரமணியன், பொன்முருகன், தமிழக வியாபாரிகள் சம்மேளன ரங்கே கவுடா் வீதி தலைவா் மணி ஆகியோா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கோவை ரங்கே கவுடா் வீதியில் 60 வருட பாரம்பரியமிக்க நிறுவனமாக மயில் மாா்க் சம்பா ரவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களிடம் பீதியை கிளப்பி வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மயில் மாா்க் சம்பா ரவை சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக ஒரு வழக்கை சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவையைச் சோ்ந்த (ரவிகாந்த்) என்பவா் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்ததைத் தொடா்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மயில் மாா்க் சம்பா ரவை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சம்பா ரவை தயாரிப்புகளை பரிசோதனை கூடத்துக்கு அனுப்பிவைத்தனா்.
அதில் மயில் மாா்க் சம்பா ரவையில் எந்த விதமான வேதிப்பொருளோ, பூச்சிக்கொல்லி மருந்தோ கலக்கவில்லை என சோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த அறிக்கையை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளாா்.
மேலும், மயில் மாா்க் சம்பா ரவை குறித்து கடந்த மாதத்தில் வாட்ஸ்ஆப்பில் அவதூறு விடியோவை சிலா் பரப்பினா். இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.