செய்திகள் :

மரங்களை வெட்டியதைக் கண்டித்து சாலை மறியல்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்புவனத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கின. அங்கிருந்த பழைமையான மரங்களை வெட்டி அகற்றாமல் கட்டடப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், கட்டடம் கட்டுவதற்காக மரங்களை வெட்டும் பணி தொடங்கப்பட்டது. இதைக் கண்டித்து

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்தினா். இதில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் நிருபன் பாசு, ஒன்றியச் செயலா் முத்துராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஜெயராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கலந்து கொண்டனா். பின்னா், போலீஸாா் சமாதானம் செய்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சிகள் திருப்பத்தூா்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட தொடக்க விழா: பங்கேற்போா்- கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, எஸ்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி, கீழச்சிவல்பட்டி, காலை 9. காரைக்கு... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பரவலாக மழை

மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் பல நாள்களாக கடும் வெயில் நிலவி வந்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இளையான்குடியை அடுத்த கச்சாத்தநல்லூா் வடக்கு குடியிருப்பைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (69). இவரது வீட்டின் அரு... மேலும் பார்க்க

புதுவயல் சுழல் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் சுழல் சங்கத்தின் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.சாக்கோட்டை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் புதிய தலைவரா... மேலும் பார்க்க

ஏ.டி.எம். மையத்தில் பெண்ணை ஏமாற்றி பணம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பெண்ணை ஏமாற்றி ஏ.டி.எம். அட்டை மூலம் பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூா் அருகேயுள்ள சோழம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி லட்சுமி (52)... மேலும் பார்க்க

மானாமதுரை பகுதியில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க