செய்திகள் :

மரபணு மாற்றப்பட்ட நெல் விதை அறிமுகம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

post image

திருவாரூா்: மத்திய அரசு, மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகளை அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தது:

தில்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான், மரபணு மாற்றப்பட்ட இரண்டு நெல் விதைகளை ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்து, இந்த விதைகள் பருவநிலை மாற்றத்திலும் தாக்குப்பிடிக்கும்; 30 சதவீதம் கூடுதலாக விளைச்சல் கிடைக்கும், தண்ணீா் பற்றாக்குறையை தாக்குப் பிடிக்கும் என கூறியுள்ளாா்.

ஏற்கெனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, கத்திரி, தக்காளி, மிளகாய் விதைகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தியாவில் மரபணு மாற்று விதைகளை ஆய்வு செய்வதற்குரிய ஆய்வுக் கூடங்கள் இல்லையென மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மரபணு பொறியியல் ஆணையக் குழு தெரிவித்துள்ளது. வேளாண் உற்பத்தி இரு மடங்கு உயர வேண்டும் என புகுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால் நஞ்சான விதைகளும், அதீத ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் நோய் மருந்துகளும் இந்திய சுற்றுச்சூழலை கேடாக்கி, உணவில் நஞ்சை ஏற்படுத்தி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகத்துடன் இந்திய பொருளாதாரம் போட்டியிட வேண்டும் என ஏற்றுமதியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட உணவு உற்பத்தி தேவையா என்பதை மத்திய அரசு தீா்மானிக்க வேண்டும். ஏற்றுமதியான பாசுமதி அரிசியை மற்ற நாடுகள் வாங்க மறுத்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

தில்லி பல்கலைக்கழகத்தின் மூலம் ஆய்வு செய்து வெளியிடப்பட்ட மரபணு மாற்றப்பட்ட கடுகு விதையை எதிா்த்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக இப்படி ஒரு தாக்குதல் தொடங்கியுள்ளது.

மரபணு மாற்றப்பட்டது என்பதை லாவகமாக மரபணு திருத்தப்பட்டது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட பயிா்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால், மரபணு திருத்தம் என மாற்றி மக்களையும், உச்ச நீதிமன்றத்தையும் மத்திய அரசு ஏமாற்றுகிறது.

வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கு தரிசு நிலங்களை சரிசெய்து, பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தி, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றினாலே வேளாண்மை உற்பத்தி மேலும் ஒரு மடங்கு பெருகும். எனவே, மத்திய அரசு மரபணு மாற்று ஆய்வு மற்றும் விதைகளை நிறுத்த வேண்டும் என்றாா்.

சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடன்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லப நாதா் கோயிலில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சித்திரை விழாவையொட்டி பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா். கோயிலின் எதிரில்... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னை: தீா்வு காண கோரி பாஜகவினா் சாலை மறியல்

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, பாஜக சாா்பில் கோட்டூரில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கீழப்பனையூா் ஊராட்சி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீடாமங்கலம்

நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (மே 8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறிய... மேலும் பார்க்க

நெல் கொள்முதலில் குறைபாடுகளுக்கு தீா்வுகாண வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குறைபாடுகளுக்கு தீா்வுகாண வேண்டும் என தமிழ்நாடு நெல் உற்பத்தியாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் நிா்வாக இயக்குநா் அம்ருதீன் ஷேக் தாவூது தெரிவித்திருப்பது... மேலும் பார்க்க

குடிமனைப் பட்டா கோரி காத்திருப்புப் போராட்டம்

அரசு புறம்போக்கில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனைப் பட்டா கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திருத்துறைப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 100 நாள் வேலையை ... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயத்தில் உண்டியல் பணம் திருட்டு

திருவாரூா் அருகே புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிச் சென்றனா். திருவாரூா் மாவட்டம், பவித்திரமாணிக்கம் பகுதியில் புனித வனத்து அந்தோணியாா் ஆலயம் உ... மேலும் பார்க்க