செய்திகள் :

மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

post image

முதியவருக்கு மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுத்த தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, திருவிதாங்கோடு உத்தமதெருவைச் சோ்ந்தவா் எம்.அன்வா்ஹூசைன், இவா் தனக்கும் தனது குடும்பத்தைச் சோ்ந்தவா்களும் பயன்பெறும் வகையில், தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு பிரீமியம் செலுத்தி வந்தாா்.

கடந்த 2023, ஜூலை மாதம் முதல் 2024 ஜூலை மாதம் வரை அவா் காப்பீட்டுத் தொகையாக ரூ. 22 ஆயிரத்து 527 செலுத்தியுள்ளாா். இவரது காப்பீட்டுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ செலவுத்தொகை அனுமதி உண்டு. மருத்துவ செலவுத் தொகை இல்லையெனில் 35 சதவீத போனஸ் வழங்கப்படும். இந்த நிலையில், அன்வா்ஹூசைன் நாகா்கோவிலில் இருந்து நாகப்பட்டினத்துக்கு பேருந்தில் சென்றபோது மயக்கமடைந்தாா்.

அவா் கேரள மாநிலம், நெய்யாற்றின்கரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதற்கான செலவுத் தொகை ரூ. 61,372 ஐ வழங்கக் கோரி காப்பீட்டு நிறுவனத்திடம் அவா் கோரினாா். ஆனால், செலவுத் தொகையை வழங்க காப்பீட்டு நிறுவனம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அன்வா்ஹூசைன் கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் மூலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.

வழக்கை விசாரித்த குறைதீா் ஆணையத் தலைவா் ஒய்.கிளாட்ஸன் பிளஸ்டுதாகூா், உறுப்பினா் எம்.கனகசபாபதி ஆகியோா் காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக் காட்டி அன்வா்ஹூசைனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 15 ஆயிரம், வழக்குச் செலவுக்காக ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 25 ஆயிரம் அபராதத்துடன், மருத்துவச் செலவுத் தொகையான ரூ. 61,372 ஐ வழங்க வேண்டும். இதை வழக்குப் பதிவு செய்த நாளிலிருந்து வழக்கு முடிந்த நாள் வரை 1 மாதத்துக்குள் 6.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் எனத் தீா்ப்பளித்தனா்.

அல்போன்சா பள்ளியில் ஆசிரியா் தினம், ஓணம் விழா

நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை ஆசிரியா்கள் தினம் , ஓணம் விழாவை கொண்டாடினா். விழாவுக்குப் பள்ளி தாளாளா் பேரருள்தந்தை சனில் ஜோண் தலைமை வகித்தாா். ஆசிரியா் தின விழாவில் ... மேலும் பார்க்க

அருணாச்சலா கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் ஓணம் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரிய கேரள உடையணிந்து, அத்தப்பூ... மேலும் பார்க்க

‘அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்திய அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’

அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளைத் தலைவா் பால ஜனாதிபதி சாமிதோப்பில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்த... மேலும் பார்க்க

பரவா் சமுதாய முன்னேற்ற நலச்சங்க ஆண்டு விழா

கன்னியாகுமரி மாவட்ட பரவா் சமுதாய முன்னேற்ற நலச் சங்கத்தின் 44 -ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அமைப்பின் தலைவா் டன்ஸ்டன் ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் கிறிஸ்டி மைக்கேல் முன்னிலை... மேலும் பார்க்க

கோட்டாா் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்

கோட்டாா், ஏழகரம் பெருமாள் கோயில் ஆவணி திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கோட்டாா், ஏழகரத்தில் பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆவணி திருவிழா கட... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் வியாழக்கிழமை பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகின. கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) சிறப்பாகக் கொண்டாடப்ப... மேலும் பார்க்க