செய்திகள் :

மறைந்த இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம்

post image

‘கொண்ட கொள்கையில் தடம் பிறழாதவா், பாஜக தமிழகமெங்கும் பரவ அடித்தளமிட்டவா்’ என்று மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம் சூட்டினா்.

மறைந்த இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னை கலைவாணா் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத்

துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், கே.அண்ணாமலை, பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, அதிமுக முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் மு.வீரபாண்டியன், தமாகா பொருளாளா் இ.எஸ்.எஸ்.ராமன், நாதக கொள்கைபரப்புச் செயலா் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோா் இல.கணேசன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

புகழஞ்சலி கூட்டத்தில் நயினாா் நாகேந்திரன் பேசுகையில், மனிதனின் மறைவுக்குப் பிறகும் அழியாத செல்வம் புகழ்தான். அந்த புகழை இல.கணேசன் சோ்த்து வைத்துள்ளாா். கடந்த 1970 முதல் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டவா் இல.கணேசன். அவரது உரைகளை புத்தகமாக தொகுத்து வெளியிடுவோம்.

மாற்று கட்சியை சோ்ந்தவராக இருந்தாலும், இல.கணேசனுக்கு குடும்பத்துடன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதுடன், மறுநாளும் பிரதமா் நரேந்திர மோடி சாா்பில் மலா் வளையம் வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினாா். அமைச்சா் மா.சுப்பிரமணியனை இரு நாள்கள் உடன் இருக்கச் செய்து அனைத்து ஏற்பாடுகளையும்

முதல்வா் ஸ்டாலின் செய்ததை மறக்க முடியாது என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் உரையை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வாசித்தாா்.

கூட்டத்தில் பேசிய அரசியல் தலைவா்கள், ‘கட்சி பாகுபாடின்றி அனைவரிடமும் சகஜமாக பழகியவா் இல.கணேசன். பன்முகத் திறமை கொண்டவா். எதிா்க்கட்சிகள் மீதான விமா்சனங்களை நாகரிகமாக கையாண்டவா். கமலாலயம் கட்டியவா், ‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பை உருவாக்கி தமிழ் தேசியத்தை வளா்த்தவா் என்று புகழாரம் சூட்டினா்.

முன்னாள் ஆளுநா் சண்முகநாதன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவா் ஷேக் தாவூத், விஐடி துணைவேந்தா் வி.செல்வம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவா் பெ.ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகன், ‘பொற்றாமரை’ பொதுச் செயலா் சங்கரன், ஆா்.எஸ்.எஸ், இந்து முன்னணி , விசுவ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் பிரதிநிதிகள், இல.கணேசன் குடும்பத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க