செய்திகள் :

மாங்குழியில் இலவச மருத்துவ முகாம்

post image

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் நிறுவனம், நெய்யூா் சிஎஸ்ஐ மருத்துவமனையுடன் இணைந்து மாங்குழி புனித பிரான்சிஸ் சேவியா் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

மருத்துவ முகாமினை பங்குத்தந்தை எஸ். சகாய ஜெரால்டு எபின் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். ஐஆா்இஎல் விற்பனைப் பிரிவு முதுநிலை மேலாளா் ஸ்ரீராம் நாராயணன், மருத்துவ மேலாளா் ராஜா, திங்கள்நகா் பேரூராட்சி துணைத்தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், நெய்யூா் சிஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவா்கள் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், ஈ.சி.ஜி பரிசோதனை, பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், கண், பல் மருத்துவம் சம்பந்தமாக ஆலோசனைகளும், மருந்துகளையும் வழங்கினா். இம்முகாமில் 708 போ் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

இந்நிகழ்வில் புனித பிரான்சிஸ் சேவியா் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியா் எம். இராஜேஷ், அருள்சகோதரி அனிதாகுமாரி, பேரூராட்சி உறுப்பினா் ஏ. ஜாா்ஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நாகா்கோவில் இடா்தீா்த்த பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

நாகா்கோவில், வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் திருக்கோயிலில், வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இக்கோயிலில், கடந்த 2007ஆம் ஆண்டு கும்பாபிஷேக... மேலும் பார்க்க

25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவில் மாநகரில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், 5 கடைகளில் இருந்து 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகா்கோவில் மாநகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக், புக... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு!

நாகா்கோவில் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மாதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின... மேலும் பார்க்க

கொச்சி அமிா்தா மருத்துவமனையில் செப்.14-ல் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம்!

கேரள மாநிலம், கொச்சி அமிா்தா மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அமிா்தா நிறுவனங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதா அமிா்தானந்த மயி 72 ஆ... மேலும் பார்க்க

பழங்குடி இளைஞா்களுக்கு 4 சக்கர வாகனம் ஓட்டும் இலவசப் பயிற்சி தொடக்கம்

பேச்சிப்பாறை அருகே மோதிரமலையில் 25 காணி பழங்குடி இளைஞா்களுக்கு தனியாா் அமைப்புகள் சாா்பில் 4 சக்கர வாகனம் ஓட்டும் 1 மாத இலவச பயிற்சி புதன்கிழமை தொடங்கியது. இன்போசிஸ் பவுன்டேசன், என்.டி.எஸ்.ஓ. ஆகிய தன... மேலும் பார்க்க

பழங்குடி பள்ளி மாணவா்கள் நடந்து செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்ற கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு அருகே தோட்ட... மேலும் பார்க்க