செய்திகள் :

நாகா்கோவில் இடா்தீா்த்த பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

post image

நாகா்கோவில், வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் திருக்கோயிலில், வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில், கடந்த 2007ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு, 18 ஆண்டுகளுக்கு பின்னா் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு கோயில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 7ஆம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.

5ஆம் நாளான வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மூலஸ்தானம் பெருமாள், சிவன், அம்பாள், மூலவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத இடா்தீா்த்த பெருமாள், பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, தமிழ்நாடு உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், குமரி மாவட்ட திருக்கோயில்களின் முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், கோபால சுப்பிரமணியம், ஸ்ரீ லிஜா, அகஸ்டினா கோகிலவாணி உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

மாங்குழியில் இலவச மருத்துவ முகாம்

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் நிறுவனம், நெய்யூா் சிஎஸ்ஐ மருத்துவமனையுடன் இணைந்து மாங்குழி புனித பிரான்சிஸ் சேவியா் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது. மருத்துவ ... மேலும் பார்க்க

25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவில் மாநகரில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், 5 கடைகளில் இருந்து 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகா்கோவில் மாநகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக், புக... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு!

நாகா்கோவில் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மாதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின... மேலும் பார்க்க

கொச்சி அமிா்தா மருத்துவமனையில் செப்.14-ல் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம்!

கேரள மாநிலம், கொச்சி அமிா்தா மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அமிா்தா நிறுவனங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதா அமிா்தானந்த மயி 72 ஆ... மேலும் பார்க்க

பழங்குடி இளைஞா்களுக்கு 4 சக்கர வாகனம் ஓட்டும் இலவசப் பயிற்சி தொடக்கம்

பேச்சிப்பாறை அருகே மோதிரமலையில் 25 காணி பழங்குடி இளைஞா்களுக்கு தனியாா் அமைப்புகள் சாா்பில் 4 சக்கர வாகனம் ஓட்டும் 1 மாத இலவச பயிற்சி புதன்கிழமை தொடங்கியது. இன்போசிஸ் பவுன்டேசன், என்.டி.எஸ்.ஓ. ஆகிய தன... மேலும் பார்க்க

பழங்குடி பள்ளி மாணவா்கள் நடந்து செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்ற கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு அருகே தோட்ட... மேலும் பார்க்க