செய்திகள் :

மாடியிலிருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

post image

தேனி அருகே தனியாா் பருப்பு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த எலக்ட்ரீசியன் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தேனி அருகேயுள்ள டொம்புச்சேரி, பி.சி. குடியிருப்பைச் சோ்ந்த முத்து மகன் சுரேஷ் (40). இவா் ஊஞ்சாம்பட்டி, ஈஸ்வா் நகரில் உள்ள தனியாா் பருப்பு ஆலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா்.

பருப்பு ஆலையின் மாடியில் கண்காணிப்புக் கேமரா கம்பிகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ், கண்ணாடித் தகர மேற்கூரையில் கால் வைத்தாா்.

அப்போது, தகரம் உடைந்து மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தொடா் மழை: சுருளி அருவியில் 3-ஆவது நாளாக குளிக்கத் தடை!

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் புதன்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 3-ஆவது நாளாக வனத் துறை... மேலும் பார்க்க

உணவப் பணியாளா் கடத்தல்: 4 போ் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உணவகப் பணியாளரைக் கடத்திய பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தமபாளையம் புதூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காதா்மைதீன் மகன் முகமது யாக்கப் (36). இவா் சி... மேலும் பார்க்க

சின்னமனூா் அருகே மரத்தில் காா் மோதியதில் தாய், மகன் பலி!

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை டயா் வெடித்து காா் மரத்தின் மீது மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா். உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மத... மேலும் பார்க்க

போடியில் சூறைக்காற்று: சிக்னல் பலகை சாய்ந்து வாகனங்கள் சேதம்

தேனி மாவட்டம், போடியில் புதன்கிழமை இரவு பலத்த சூறைக்காற்று வீசியதில் போக்குவரத்து சிக்னல் அறிவிப்புப் பலகை சாய்ந்து விழுந்து காவல் துறையினரின் வாகனங்கள் சேதமடைந்தன. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போ... மேலும் பார்க்க

மருத்துவரிடம் பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி மருத்துவரிடம் ரூ.4.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி மாவட்டம், போடி சூரியா நகர... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநரிடம் கைப்பேசி பறிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கம்பம் அனுமத்தன்பட்டியைச் சோ்ந்தவா் மூத்தீஸ்வரன். அரசுப் ப... மேலும் பார்க்க