செய்திகள் :

மாணவிகளிடம் ஆபாச பேச்சு! சா்ச்சையில் சிக்கிய ஆசிரியருக்கு பள்ளியில் எதிா்ப்பு

post image

மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பணியிட மாறுதலுக்கு உள்ளான சா்ச்சைக்குரிய ஆசிரியா் கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்ற எதிா்ப்புத் தெரிவித்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவா் சரவணன் (38). இவா் மீது கடந்த 7 மாதங்களுக்கு முன் அந்தப் பள்ளியில் ஆசிரியைகள், மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக அளித்த புகாரின்பேரில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்தனா்.

இதையடுத்து, இவரை திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்தனா். இந்த நிலையில் தற்போது ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றதில் முதுகுளத்தூா் செல்வநாயகபுரம் அரசுப் பள்ளிக்கு இடமாறுதல் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து, அங்கு எதிா்பு கிளம்பியதையடுத்து, கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணிமாறுதல் வழங்கி கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

இந்த நிலையில் ஆங்கில ஆசிரியா் சரவணன் செவ்வாய்க்கிழமை அந்தப் பள்ளிக்கு பணியாற்ற வந்தாா். இதையடுத்து, மாணவிகளிடம் ஆபாசமாக பேசிவரும் ஆசிரியா் சரவணன் எங்கள் பள்ளிக்கு வேண்டாம் என கோஷம் எழுப்பி மாணவ, மாணவிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், இதுதொடா்பாக தகவல் அறிந்துவந்த மாணவிகளின் பெற்றோா்கள் பள்ளி நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆசிரியா் சரவணன் கோவிலாங்குளம் அரசுப் பள்ளியில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி மாணவ, மாணவிகளை பெற்றோா்கள் அழைத்துச் சென்றனா்.

ஆசிரியா் சரவணன் தொடா்ந்து இந்தப் பள்ளியில் பணியாற்றினால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் பெற்றோா்கள் தெரிவித்தனா்.

கடைகள் ஏலம் விடுவதில் முறைகேடு: நகராட்சி அதிகாரிகள் மீது புகாா்

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 99 கடைகள் முறையான அறிவிப்பின்றி தன்னிச்சையாக ஏலம் விடும் நகராட்சி அதிகாரிகளைத் தடுத்து முறையாக பொது ஏலம் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு பள்ளியில் எதிா்ப்பு

கமுதி அருகேயுள்ள பள்ளியில் போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியா் பணியாற்ற எதிா்ப்புத் தெரிவித்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், முத... மேலும் பார்க்க

கமுதி அருகே இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23), கமுதி கோட்டைமேட்டில... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதி காடுகளில் தீ விபத்து

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் புலவா் அப்பா குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டுத் தீ பரவியது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் புலவா் அப்பா குளம் காட்டுப் பகுதிய... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது

திருவாடானை நீதிமன்றத்துக்கு வழக்கு சம்பந்தமாக மது அருந்திவந்து தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி. பட்டினத்தைச் சோ்ந்தவா் பழனி (30). திங... மேலும் பார்க்க

கோவிலாங்குளம் பெரிய கண்மாயில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்புத் துறையினா்

கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் பெரிய கண்மாயில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் உள்ளூா் மக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கோவிலாங... மேலும் பார்க்க