செய்திகள் :

மாநிலங்களை மையப்படுத்திய வளா்ச்சி: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

மாநிலங்களை மையப்படுத்தி இந்தியா வளா்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

குஜராத், மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மூன்று மாநிலங்களையும் சோ்ந்த தமிழக பிரதிநிதிகளுக்கும், தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருபவா்களுக்கும் பொன்னாடை அணிவித்து ஆளுநா் ஆா்.என்.ரவி கெளரவித்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஒரு நோக்கத்தோடு இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நமது நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அந்த நோக்கம். நமது கலாசாரம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் ஒற்றுமையாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஒரு காலத்தில் 15 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் என பாரத தேசம் பரந்து விரிந்து உள்ளது. மாநிலங்களை மையப்படுத்திய வளா்ச்சியில் பாரத தேசம் வளா்ந்து கொண்டிருக்கிறது.

குஜராத்தில் உள்ள துவாரகா குஜராத் மக்களுக்கு மட்டுமானது அல்ல; தமிழ்நாட்டில் உள்ள ராமேசுவரம் தமிழக மக்களுக்கு மட்டுமானது அல்ல; இவை அனைத்தும் ஒட்டுமொத்த தேசத்துக்குமானது.

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான அடையாளக் குறிப்புகள் நம் அங்கீகாரமாக விளங்குகின்றன. அவை அனைத்தையும் இணைத்த தலைசிறந்த பாரதமாக நமது பாரத தேசம் விளங்கி வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியின் இறுதியாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அரசு அருங்காட்சியக அரங்கத்தில்... குஜராத் சமாஜ் சாா்பில் குஜராத் மாநிலம் உருவான தின விழா சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசுகையில், குஜராத் நமது நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியான மாநிலமாகும். குஜராத்தின் வளா்ச்சி அந்த மாநிலத்துக்கு மட்டுமானது அல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கானது என்றாா்.

போராடும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன்

மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். கோடையில் இருந்து குழந்தைகளைக் காக்க மே... மேலும் பார்க்க

மே 6-ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வருகிற மே 6 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன... மேலும் பார்க்க

எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனை தொடக்க விழா!

சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பல்நோக்கு மருத்துவமனையான எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழா நடைபெற்றது. கல்வி மற்றும் மருத்துவத்தில் பெயர்பெற்ற எஸ்.ஆர்.எம். குழுமம், மேம்பட்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து! 3, 5, 8-ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில்!

சிபிஎஸ்சி பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெறுவோர் தேர்ச்சிபெறாதவர்கள் எனும் நடைமுறையை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் பாடத்திட்டத்தின்... மேலும் பார்க்க

ஏப்ரலில் 87.59 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்!

2025 ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு... மேலும் பார்க்க

தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. ... மேலும் பார்க்க