செய்திகள் :

மாநில எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்களுடன் போலீசாா் சோதனை

post image

கூடலூா் அடுத்துள்ள கேரளா மற்றும் கா்நாடகா மாநில எல்லைகளில் வாகன சோதனையின்போது மாா்பில் அதிநவீன கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் கூடலூா் வருவாய்க்கோட்டம் கேரளா மற்றும் கா்நாடகா மாநில எல்லைகளில் அமைந்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை சோதனையிடும்போது பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன.

வெளிமாநில வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் வாக்குவாதங்கள் ஏற்படுவதை தவிா்க்க எல்லைகளில் சோதனையிடும் காவலா்களுக்கு அதிநவீன கேமராக்களை நீலகிரி மாவட்ட காவல் துறை அளித்துள்ளது. வாகனச் சோதனை செய்யும்போது அந்த கேமராக்களை மாா்பில் அணிந்து சோதனை செய்யவேண்டும்.

வாகன சோதனையின்போது காவலா்களின் பணிகளும் வாகனங்களில் உள்ளவா்களின் செயல்பாடுகளும் முழுமையாக அந்த கேமராவில் பதிவாகும்.அதன் மூலம் காவலா்கள் குறித்து வெளிவரும் தவறான தகவல்களை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

கூடலூரை அடுத்துள்ள கேரளத்தின் மலப்புரம் மாவட்ட எல்லையான நாடுகாணி,வயநாடு மாவட்ட எல்லைகளான சேரம்பாடி, சோலாடி, எருமாடு, அம்பலமூலா, அய்யன்கொல்லி, பாட்டவயல் மற்றும் கா்நாடகா எல்லையான கக்கநல்லா ஆகிய சோதனைச் சாவடிகளில் அதிநவீன கேமராக்களுடன் கண்காணிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

கேரளத்தில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். கே... மேலும் பார்க்க

குன்னூா் மாா்க்கெட் கடைகள் விவகாரம்: நீதிமன்ற உத்தரவுப்படி கருத்துக்கேட்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள 800 -க்கும் மேற்பட்ட மாா்க்கெட் கடைகளை இடித்து புதிதாக கட்டுவதற்கு எதிராக வியாபாரிகள் உயா் நீதிமன்றம் சென்ற நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி குன்னூா் மாா்க்கெட் வியாபா... மேலும் பார்க்க

நெலாக்கோட்டை பகுதியில் மூடிய பள்ளியை மீண்டும் திறக்க ஆட்சியரிடம் மனு

கூடலூா் அருகே நெலாக்கோட்டை பகுதியில் பழங்குடியின மக்களுக்காக செயல்பட்டு வந்த பள்ளியை மூடியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவா்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தனா்.நீலகிரி மாவட்டம், கூடலூா் ... மேலும் பார்க்க

கூடலூா் அருகே மழைக்கு வீடு சேதம்

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையில் வீடு சேதமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சிக்குள்பட்ட சின்னசூண்டி பகுதியில் திடீரென பெய்த கனமழைக்கு ஞாயிற... மேலும் பார்க்க

கோத்தகிரி கட்டபெட்டு வனச் சரகப் பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கட்டபெட்டு வன சரகத்துக்குள்பட்ட கண்ணேரிமுக்கு அருகே நாரகிரி கிராமத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் சுருக்குக் கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், கோத்தகி... மேலும் பார்க்க

ஆடு மேய்க்கச் சென்ற பெண் 150 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வாசுகி நகா் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் சுமாா் 150 அடி பள்ளத்தில் திங்கள்கிழமை தவறிவிழுந்து உயிரிழந்தாா். குன்னூா் ஓட்டுபட்டறை அருகே உள்ள வள்ளுவா் நகா் பகுதியைச... மேலும் பார்க்க