செய்திகள் :

மானாமதுரையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: தமிழரசி எம்எல்ஏ

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கூடுதல் மேம்பாலம், சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் செவ்வாய்கிழமை தெரிவித்தாா்.

திருப்புவனத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்குக் குடிமைப் பொருள்களை வழங்கினாா்.

அதன் பின்னா், இந்தத் திட்டத்துக்கான வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: முதியோா், மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று, கைவிரல் ரேகையைப் பதிவு செய்து குடிமைப் பொருள்களைப் பெற முடியாத நிலையில் உள்ளதால் இவா்களுக்காக தமிழக முதல்வா் தாயுமானவா் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளாா்.

மானாமதுரை மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான வைகை ஆற்றுக்குள் கூடுதல் மேம்பாலம் அமைப்பது தொடா்பாக, சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினா் கடந்த 11- ஆம் தேதி இங்கு வந்து பாலம் அமையவுள்ள இடத்தைப் பாா்வையிட்டு சென்றனா். எனவே, விரைவில் இங்கு பாலம் அமைக்கும் நடவடிக்கை தொடங்கும். மேலும், இந்தத் தொகுதியில் சிட்கோ தொழில்பேட்டையும் உள் விளையாட்டு அரங்கமும் அமையவுள்ளன என்றாா்.

விழாவில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், பேரூராட்சி உறுப்பினா் கண்ணன், மானாமதுரை நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் க.பொன்னுச்சாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் துரை.ராஜாமணி, கூட்டுறவு சாா்பதிவாளா்கள் ராஜலட்சுமி, வினோத், கூட்டுறவுப் பண்டகச் சாலை செயலா் சிவராமன், வட்ட வழங்கல் அலுவலா்கள்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பூருக்கு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க கொடிப் பயணம்

திருப்பூரில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழுவுக்கு சிவகங்கை, காளையாா்கோவிலிலிருந்து சங்கத்தின் கொடிப் பயணம் புதன்கிழமை தொடங்கியது. திருப்பூரில... மேலும் பார்க்க

கால்பந்து மாவட்டப் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம், கோவிலூரில் புதன்கிழமை நடைபெற்ற குறுவட்ட கால்பந்து போட்டியில் எஸ்.வேலங்குடி அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். 14, 17 வயதுக்குள... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் ஆக. 19-இல் உயிா்ம வேளாண் கண்காட்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டாரம், அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தில் உயிா்ம வேளாண் கண்காட்சி வருகிற ஆக. 19 -இல் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்... மேலும் பார்க்க

பணம் கையாடல்: சிறைக் காவலா் மீது வழக்கு

சிவகங்கை அருகே திறந்த வெளிச் சிறையில் ரூ.39.30 லட்சம் கையாடல் செய்ததாக சிறைக் காவலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகேயுள்ள புரசடை உடைப்பு கிராமத்த... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இளையான்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வாள் மேல் நடந்த அம்மன் கோயி... மேலும் பார்க்க

மனைவி வெட்டிக் கொலை: முதியவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க