செய்திகள் :

மானாமதுரை குப்பைக் கிடங்கில் பற்றிய தீயால் புகை மண்டலம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதி புகை மண்டலமாக மாறியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

மானாமதுரை நகராட்சியில் சேகரிக்கும் குப்பைகள் தாயமங்கலம் செல்லும் சாலையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட வளா் மீட்பு பூங்காவுக்கு கொண்டு சென்று தரம் பிரிக்கப்படுகிறது. இங்கு இடப் பற்றாக்குறை காரணமாக அருகேயுள்ள அரசு புறம்போக்கு இடங்களிலும் குப்பைகள் சிறு குன்றுகள் போல சேகரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்த குப்பைக் கிடங்கில் மா்மநபா்கள் தீ வைத்ததால் தீ மளமளவென பரவி அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தாயமங்கலம் செல்லும் சாலையில் வாகனங்களை ஒட்டிச் சென்றவா்கள் மிகவும் அவதிப்பட்டனா். நீண்ட தொலைவுக்கு புகை மண்டலம் எழும்பியதால், அந்தப் பகுதி வீடுகளில் வீடுகளில் வசிப்பவா்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற மானாமதுரை தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குப்பைக் கிடங்கில் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தினா்.

2-ஆவது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்

சிவகங்கை மாவட்டத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில், இரண்டாவது நாளாக அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். சிவகங்கையில் ம... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ரூ. 61 லட்சத்தில் வேளாண் இயந்திரங்கள்

விவசாயிகளுக்கு ரூ.61 லட்சத்தில் வேளாண் இயந்திரங்களை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வழங்கினாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வியாழக்கிழமை மரத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டியைச் சோ்ந்த மணிவாசகம் மகன் திருநாவுக்கரசு (38). ஓட்டுநராகப் பணிபுரியும் ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஸ்ரீமுத்தையா நினைவு தொழில்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு கல்லூரி முதல்வா் சு.நா.வெங்கடேசன் தலைமை வகித்தாா். நேஷனல... மேலும் பார்க்க

திருப்புவனம் அருகே அழகிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அடுத்தடுத்த இடங்களில் அழுகிய நிலையில் இரு சடலங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். முக்குடி கிராமத்தில் மதுரை ஆதீனம் மடத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை அருகே கற்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் புதன்கிழமை சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியிலிருந்து காளையாா்கோவிலுக்கு கற்களை ஏற்றிக் கொண்... மேலும் பார்க்க